கள்ளநோட்டு வழக்கில் 6 பேருக்கு 7 ஆண்டு ஜெயில்- தென்காசி கோர்ட்டு தீர்ப்பு
1 min read7 years in jail for 6 people in counterfeiting case – Tenkasi court verdict
24.4.2024
தென்காசி மாவட்டம், வீ.கே.
புதூர் பகுதியில் கள்ள ரூபாய் நோட்டு வழக்கின் கைது செய்யப்பட்ட 6 குற்றவாளி களுக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கள்ள ரூபாய் நோட்டு வைத்திருத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இடையர்தவனை ராமர் என்பவரது மகன் ஐயப்பன்(வயது 37), தாயார் தோப்பு குத்தாலிங்கம் என்பவரது மகன் சேர்மலிங்கம்(வயது 50), ஜான்சன் என்பவரது மகன் மோசஸ் ராஜ்குமார்(வயது 44), சங்கரன்கோவில் முருகேசன் என்பவரது மகன் மணிகண்டன்(வயது 57), ராஜபாளையம் சீனி என்பவரது மகன் வீரபாண்டியன் (வயது 57) மற்றும் ராஜபாண்டி சண்முகையா என்பவரது மகன் ராஜேந்திரன் (வயது 52) ஆகியோர் அப்போதைய சுரண்டை காவல் ஆய்வாளர் பெருமாள் கைது செய்து சிறையில் அடைத்தார்.
இவ்வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந் நிலையில் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மாரீஸ்வரி குற்றவாளிகள் 6 பேர்களுக்கும் தலா 07 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.
இந்த வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த வீ.கே.புதூர் காவல்துறை யினருக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.