May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையம் அருகே விபத்தில் பலியான திமுக பிரமுகர் குடும்பத்துக்கு உதவி

1 min read

Help to family of DMK leader who died in an accident near Kadayam

4.5.2024
தென்காசி தெற்கு மாவட்டம்,
கடையம் ஊராட்சி ஒன்றியம் பெரும்பத்து ஊராட்சி கானாவூரில் டிராக்டர் விபத்தில்பலியான திமுக பிரமுகர் குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவியினை மாவட்ட பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் வழங்கினார்.

தென்காசி தெற்கு மாவட்டம், கடையம் வடக்கு ஒன்றியம், கடையம்பெரும்பத்து ஊராட்சி கானாவூரைச் சோந்தவர்கடல்மணி. திமுக பிரமுகரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன், கடல்மணியின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் மாவட்ட திமுக சார்பில் ரூ.10 ஆயிரம் நிதியுதவியினையும் அவர் வழங்கினார்.

இதில் கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ்மாயவன், கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், சுரண்டை நகர பொறுப்பாளர் கணேசன், துணை அமைப்பாளர்கள் அற்புதராஜ், ராஜேஷ், சங்கரநயினார், பஞ்சாயத்து துணை தலைவர் சுதன், தகவல் தொழில்நுட்ப அணி செல்லத்துரை, கிளை செயலாளர்கள் பால்கனி, சிவனையா, தாவீது மோசை, துரைராஜ்பாண்டியன், அந்ரேயா, அருள்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.