May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

1 min read

District Collector inspected school vehicles in Tenkasi

5.5.2024
தென்காசி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசின் உத்தரவின்படி வரும் ஜீன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி தென்காசி வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட தனியர் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்ட இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆய்வில் பள்ளிக் கல்வித்துறை, காவல்துறை. போக்குவரத்துத்துறை ஆகிய துறைகளின் அலுவலர்களால் பள்ளி வாகனங்கள் அரசு விதிமுறைகளின்படி இயங்குகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் தென்காசி வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 368 பள்ளி வாகனங்களில் 171 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் 149 பள்ளி வாகனங்கள் தகுதியான நிலையில் உள்ளது என கண்டறியப்பட்டது. மீதமுள்ள 22 வாகனங்கள் குறைகள் கண்டறியப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே இயக்க வேண்டும் என்று தென்காசி மாவட்டஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப. அவர்கள் உத்தரவிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.