June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

ஐகோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள 30 ஆண்டுகள் பழமையான 62 ஆயிரம் வழக்குகள்

1 min read

62 thousand cases of 30 years old pending in hige Courts

8.9.2024
நாட்டில் உள்ள பல்வேறு ஐகோர்ட்டுகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுமார் 62 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 1954-ம் ஆண்டில் இருந்து 4 வழக்குகளும், 1955-ம் ஆண்டில் இருந்து 9 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
அதேபோல் 1952-ம் ஆண்டில் இருந்து 2 வழக்குகள் கொல்கத்தா ஐகோர்ட்டிலும், ஒரு வழக்கு சென்னை ஐகோர்ட்டிலும் நிலுவையில் இருக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் நீதித்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது என்றும், இதற்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *