June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

ரஷியா – உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை- பிரதமர் மோடி பேச்சு

1 min read

India is not neutral on Russia-Ukraine issue – PM Modi’s speech

14.2.2025
அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து பேசினார். அப்போது, ரஷியா உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இருக்கவில்லை என்று உறுதியாக தெரிவித்தார். மேலும், இந்தியா அமைதியின் பக்கம் நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் அதிபர் டிரம்ப் முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டினார்.
இது குறித்து பேசிய பிரதமர் மோடி, “இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது. இது போரின் சகாப்தம் அல்ல என்று நான் ஏற்கனவே அதிபர் விளாடிமிர் புதினிடம் கூறியுள்ளேன். அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன்” என்று கூறினார்.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் அதிபர் டிரம்ப் தனித்தனியாக தொலைபேசியில் பேசியிருந்தார். இதன் பிறகு பிரதமர் மோடி இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதில் இருந்து, 2022 உக்ரைன் படையெடுப்பு குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினிடம் உரையாடியதாக அமெரிக்க அதிபர் கூறினார். மேலும் அமைதி பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் “ஒரு பகுதியாக” இருக்கும் என்றும், ரஷிய அதிபர் புதின் “சமாதானத்தை விரும்புகிறார்” என்று தான் உறுதியாக நம்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவும் இது “போரின் சகாப்தம் அல்ல, உரையாடல் மற்றும் ராஜதந்திரத்தின்” சகாப்தம் என்று

வலியுறுத்தி வருகின்றனர். உக்ரைன் மோதல் தொடங்கியதில்

இருந்து, பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனும்,

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனும் பலமுறை பேசியுள்ளார்.
கடந்த ஆண்டு இரு தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *