June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு புதிய பெயர் சூடிய சீனா- இந்தியா கண்டனம்

1 min read

China, India condemn new names for places in Arunachal Pradesh

14.5.2025
அருணாசல பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா மறுபெயரிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்குப் பெயரிட சீனா தொடர்ந்து அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக உள்ளது, எப்போதும் இருக்கும். கற்பனையான பெயர் சூட்டல்களால் இந்தியாவின் பகுதியை ஒரு போதும் சீனா சொந்தம் கொண்டாட முடியாது” என்று தெரிவித்தது.

மேலும், சீன அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *