பதவி பறிப்பு மசோதாவில் பிரதமர் பெயர் இடம்பெறச் சொன்னது, மோடி
1 min read
The Prime Minister’s name was included in the impeachment bill.
24.8.2025
பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறைக்காவல் பெற்றால் அவர்கள் பதவி விலக வேண்டும் என்ற வகையில் பதவி பறிப்பு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர்கள், அமைச்சர்கள், ஐந்து ஆண்டு தண்டனை பெறக்கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி தானாகவே பறிபோகும் என்பதுதான் அந்த மசோதாவின் முக்கியம்சம். இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில், இந்த மசோதாவில் முதலில் பிரதமர் பெயர் சேர்க்கப்பட வேண்டாம் என மந்திரி சபையில் ஆலோசனை வழங்கப்பட்டது. பிரதமரும் ஒரு குடிமகன், அவருக்கு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறப்பு பாதுகாப்பு இருக்கக் கூடாது என்று கூறி பிரதமர் மோடி ஆலோசனையை ஏற்க மறுத்தார். இதனால் பிரதமர் பெயர் சேர்க்கப்பட்டது. அதன்பின் மசோதாவுக்கு சம்மதம் தெரிவித்தார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.