தி.மு.க முப்பெரும் விழா – அண்ணாமலை விமர்சனம்
1 min read
DMK’s Triple Festival – Annamalai Review
18.9.2025
பாஜக பல புதிய மாநிலங்களில் வளர்ந்து வருகிறது. அடுத்து பீகாரிலும் பாஜகதான் ஆட்சிக்கு வரும். காங்கிரஸ் எத்தனை மாநிலங்களில் உள்ளது. திமுகவுக்கு எடுபிடியாகிவிட்டது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தங்களை எடுபிடி கட்சி என்று பெயரை மாற்றிக்கொள்ளலாம்.
சாராயம் விற்ற காசில் தான் திமுக முப்பெரும் விழா கரூரில் நடந்துள்ளது. மண் குதிரையை நம்பி காவிரியை நோக்கி புறப்பட்டுள்ளார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். செந்தில் பாலாஜியை திருடன் என்று சொன்ன ஸ்டாலின் இன்று அவரை பாராட்டுகிறார். ஊழல் பட்டம் தரப்பட்ட செந்தில் பாலாஜியை வைத்து திமுக முப்பெரும் விழா நடைபெற்றுள்ளது. சட்டமன்றத்தில் அறிவித்த 256 திட்டங்களை திரும்பப்பெறுகிறது திமுக அரசு.
விஜய்க்கு வரும் கூட்டம் அமைதியாக வந்து சென்றால் சந்தோஷம், இதில் விஜய், அரசுக்கு பொறுப்பு உள்ளது. என்.டி.ஏ.வில் இருந்து வெளியேறிய தினகரனை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். பன்னீர் செல்வம், தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தேசிய தலைமை முடிவு செய்வார்கள்.ஒரு கூட்டணியில் எவ்வளவு தலைவர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு சந்தோஷம்.
மக்கள் வரிப்பணத்தில் ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்காத நான் கணக்கு காட்ட வேண்டியுள்ளது. என் சொந்த சம்பாயத்தியத்துக்கும் நான் கணக்கு காட்ட வேண்டி உள்ளது.அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக என்று பழனிசாமி கூறுவது உண்மை. இதை வரவேற்கிறேன். முதல்-அமைச்சர் வேட்பாளர் பழனிசாமிதான், அதற்காக உழைப்போம், எல்லா முயற்சிகளை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசியிருந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த சந்திப்பு முடிந்த பிறகு காரில் தங்கியிருந்த ஒட்டலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, முகத்தை மூடியபடி சென்றதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்தன. இதுதொடர்பான வீடியோவில் எடப்பாடி பழனிசாமி தனது முகத்தை கைக்குட்டையால் மூடியது போல பார்ப்பதற்கு இருந்தது. எனினும் இது தொடர்பாக விளக்கமளித்த எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் இருந்து காரில் வெளியே வரும்போது என் முகத்தை துடைத்தேன்; அதை எடுத்து அரசியல் செய்துள்ளனர். ஒரு முதலமைச்சர் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார். இவ்வாறு பேசுவது அவருக்கு அழகல்ல. முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு எள் முனை அளவும் கிடையாது. முகத்தை துடைப்பதில் என்ன அரசியல் இருக்கிறது? ” என்றார்.
இந்த நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் இதே கருத்தினை முன்வைத்து இருக்கிறார். அண்ணாமலை கூறுகையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக ஆட்சியை பாதுகாத்தது பாஜகதான் என்று பழனிசாமி கூறியது வரவேற்கத்தக்கது” என்றார்.