June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

எஸ்.ஐ.ஆர் குளறுபடி: மேற்கு வங்காளத்தில் தேர்தல் அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்டு

1 min read

SIR scam: 7 election officials suspended in West Bengal

16.2.2026
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

எஸ்.ஐ.ஆர். பணியின்போது பல்வேறு குளறுபடிகளில் ஈடுபட்ட அம்மாநிலத்தை சேர்ந்த 7 தேர்தல் அதிகாரிகளை தலைமை தேர்தல் ஆணையம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், கடமை தவறுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டதற்காக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *