தென்காசி கோவிலில் 1-ந் தேதி தேரோட்டம்
1 min read
1st day chariot procession at Tenkasi temple
23.2.2026
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகப் பெருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த திருவிழா வருகிற மார்ச் மாதம் 2-ஆம் தேதி வரை 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 10 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு கட்டளைதாரர் தீபாரதனை நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற மார்ச் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 8-50 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்குகிறது. பத்தாம் திருநாளான மறுநாள் காலையில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளிலும் கட்டளைதாரர் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் அபி நிஷா, கோவில் நிர்வாக அதிகாரி பொன்னி, கோவில் ஆய்வாளர் சரவணகுமார், அறங்காவலர் குழு தலைவர் தொழிலதிபர் ஒய். பாலகிருஷ்ணன் தலைமையில் அறங்காவலர்கள் முருகேசன், புவிதா, ஷீலா குமார், மூக்கன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
One attachment • Scanned by GmailAdd to Drive
| Muthu Samy | Sat, Feb 21, 7:39 PM (2 days ago) | Add reactionReplyMore | |
to pavoorexpress2023, fouziyaeliyas, Muthu, RPTR.KOVAI, RPTR.SENTHIL, EDITOR.NAMATHU, NELLAI, NELLAI, EDITOR.NAMATHU, CNI.DINACHEITHI.PARSAL, EDITOR.DHINA, DINACHEITHI.CNI.SENTHIL, EDITOR.DHINA, DINACHEITHI.ADVT.YUSUB, yusuf, me, Loga![]() | |||
It looks like this message is in TamilTranslate to English
தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் மாசி மகப் பெருவிழா
கொடியேற்றத்துடன் துவங்கியது
தென்காசி, பிப்.22
தென்காசி மாவட்டம்,
தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் சுவாமி மாசிமகப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் மார்ச் 1ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகப் பெருவிழா நேற்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த திருவிழா வருகிற மார்ச் மாதம் 2-ஆம் தேதி வரை 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 10 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு கட்டளைதாரர் தீபாரதனை நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற மார்ச் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 8-50 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்குகிறது. பத்தாம் திருநாளான மறுநாள் காலையில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளிலும் கட்டளைதாரர் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் அபி நிஷா, கோவில் நிர்வாக அதிகாரி பொன்னி, கோவில் ஆய்வாளர் சரவணகுமார், அறங்காவலர் குழு தலைவர் தொழிலதிபர் ஒய். பாலகிருஷ்ணன் தலைமையில் அறங்காவலர்கள் முருகேசன், புவிதா, ஷீலா குமார், மூக்கன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
