August 15, 2026

Seithi Saral

Tamil News Channel

இலங்கை: முதியோர் இல்லத்தில் தீவிபத்து – 12 பேர் பலி

1 min read

Sri Lanka: Fire at nursing home – 12 dead

5/6/2026
இலங்கையின் கொழும்பு அருகே கழுதாரா மாவட்டத்தின் Anguruwatota பகுதியில் முதியோர் இல்லம் ஒன்று அமைந்துள்ளது.

இங்கு நேற்று மாலை 5.30 மணியளவில்திடீர் தீவிபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் தீ மிக வேகமாகப் பரவியதன் காரணமாக, அங்கிருந்த முதியவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் போனது.

சம்பவ இடத்திலேயே 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீட்பு படையினர் விரைந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி தீப்பிடித்த கட்டிடத்திற்குள் இருந்து மொத்தம் 51 பேர் பத்திரமாக மீட்டனர்.

அவர்களில் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்ததினர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 7 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததே தீ விபத்துக்கு முதன்மைக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *