June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் போலீஸ் என்கவுன்டர்: ரவுடி சுட்டுக் கொலை

1 min read

Police encounter in Chennai: Rowdy shot dead

16.3.2026
சென்னை மாதவரத்தில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் குற்றப் பின்னணி கொண்ட கணேசன் என்பவர் கொல்லப்பட்டார்.
சென்னை மாதவரத்தில் ரவுடி கணேசன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாதாவரம் ரவுண்டானா அருகே பதுங்கி இருந்த கணேசனை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது கணேசன் போலீசாரைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே கணேசன் உயிரிழந்தார். கணேசன் உடலை போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *