வீட்டு வேலை பார்க்கும் பணிப்பெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வழங்கலாம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
1 min read
Supreme Court Order: Monthly Salary of Up to Rs30,000 for Domestic Workers
11/6/2026
வீட்டு வேலை பார்க்கும் பணிப்பெண்களுக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் வரை சம்பளம் வழங்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:-
பணிப்பெண்கள் தேசத்தை உருவாக்குவதில் பங்கு பெறுகிறார்கள்.
இல்லத்தரசிகளின் சமையல், குழந்தை பராமரிப்பு, முதியோர் கவனிப்பு மற்றும் குடும்ப மேலாண்மை ஆகியவை நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் இணையற்ற சேவைகள். இல்லத்தரசிகளை வெறும் வேலையாட்கள் என்று பார்க்க கூடாது. அவர்கள் தேசத்தை உருவாக்குபவர்கள்.
வீட்டுப் பெண்மணி மனிதகுலத்தின் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறார் என்ற கருத்தையும் நாங்கள் கொண்டுள்ளோம். வீட்டு வேலை பார்க்கும் பணிப்பெண்களுக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் வரை சம்பளம் வழங்கலாம்.
இவ்வாறு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.