July 3, 2026

Seithi Saral

Tamil News Channel

சகோதரரை தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு

1 min read


Case regarding assault on brother: Court orders Minister Maria Wilson to appear in person

3.7.2026
சட்டசபை தேர்தலில் தவெக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரிய வில்சன். இவர் தற்போது தமிழக நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவருடைய சகோதரரான மரிய க்ளோத், புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகரில் வசித்து வருகிறார்.

தொழில் போட்டி காரணமாக மரிய வில்சனுக்கும், அவரது சகோதரருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதற்கிடையே, கடந்த 2022-ம் ஆண்டு தொழில் போட்டி காரணமாக மரிய வில்சன், தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடுபுகுந்து தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மரிய வில்சன் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது மரிய வில்சன் ஆஜராகாத நிலையில் நாளை கட்டாயம் ஆஜராக வேண்டும் என புதுவை மாஜிஸ்திரேட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *