Maharashtra: 7 Maoists killed in encounter
8.2.2026
மராட்டியத்தில் கட்சிரோலி மாவட்டத்தில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் முக்கிய தளபதி உள்பட 7 மாவோயிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டனர். 3 நாட்களாக நடந்து வரும் இந்த மாவோயிஸ்டு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று என்கவுன்ட்டர் நடந்தது.
இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியானார். சி-60 படையின் வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. எனினும், தெலுங்கானாவை சேர்ந்த தலைக்கு ரூ.25 லட்சம் பரிசு தொகை என அறிவிக்கப்பட்ட பிரபாகர் என்ற லோகேதி சந்தர் ராவ் என்ற மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதியாக செயல்பட்டு வந்தவர் சுட்டு கொல்லப்பட்டார்.
போலீசாருடனான மோதலில், அவருடன் மற்ற 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றினர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.