April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

கோவையில் பிச்சை எடுக்கும் சுவீடன் தொழில் அதிபர்

1 min read

Swedish businessman begging in kovai

20/2/2020
கோவையில் மன நிம்மதிக்காக வெளிநாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் பிச்சை எடுத்து சாப்பிடுகிறார்.

தொழில் அதிபர்

சுவீடன் நாட்டை சேர்ந்தவர் கிம். இவர் அந்த நாட்டில் பிரபல தொழிலதிராவார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்தார். பின்னர் கோவையிலுள்ள ஈஷா யோகா தியான மையத்திற்கு சென்றார்.

அங்கு யோகா பயிற்சி எடுத்தார். அப்போது ஒரு இந்து சாமியார் போல் மாறினார். தினமும் காலையில் குளித்தவுடன் நெற்றியில் குங்கமம் வைத்து தியானம் செய்வார்.
அவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த பணத்தின் ஒரு பகுதியை ஏழை எளிய மக்களுக்கு தானமாக கொடுத்து உதவி செய்தார்.

பிச்சை எடுக்கிறார்

இதை எல்லாம் ஒரு மன நிம்மதிக்காக செய்தார். ஆனாலும் அதில் அவருக்கு முழு திருப்தி இல்லை.
இந்துக்களில் வழிபாட்டு முறையில் பிச்சை எடுத்து சாப்பிடுவதும் ஒன்று. அந்த கால பிராமணர்கள் சிலர் குறிப்பிட்ட காலம் வரை சன்னியாசிகள் வாழுவார்கள்.
அதேபோல் தொழில் அதிபர் கிம்மும் பிச்சை எடுத்து வாழ நினைத்தார்.
அதன்படி கோவை கடை வீதிகளில் தினமும் பிச்சை எடுக்கிறார். ரெயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு வணக்கம் வைத்து அவர்கள் கொடுக்கும் ஐந்து, பத்து ரூபாய் பணம் பெற்று, அதில் உணவு வாங்கி உண்கிறார். பிச்சை எடுத்த பணத்தை
ஏழைகளுக்கும் கொடுக்கிறார்.
அவர் நீண்ட தலைமுடியுடன் சட்டைஅணியாமல் நெற்றில் குங்குமம் வைத்து வீதி யில் வருவது ஒரு பழுத்த சாமியாரை போல் தெரிகிறார். இதில் நல்ல மன நிம்மதி கிடைப்பதாக அவர் கூறுகிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.