கொரோனா: சிங்கப்பூருக்கு அனாவசியமாக யாரும் போக வேண்டாம் – மத்திய அரசு அறிவுரை
1 min read
Corona: Dont go Singapore unnecessarily
22/2/2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிங்கப்பூருக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா
சீனாவின் கொரோனா வைரஸ் ஆட்டிபடைக்கிறது. ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் உருவான இந்த வைரஸ் நாடு முழுவதும் பரவியது. இதனால் சீனாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தற்போது இந்த வைரஸ் சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது.
சிங்கப்பூர்
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் சிங்கப்பூருக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா கூறியதாவது:-, கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும். நேபாளம், இந்தோனேசியா, மலேசியா, வியட்நாமில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு சோதனை நடத்தப்படும். காய்ச்சல்,இருமல்அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.