பிரபல பாடகரின் மேலாளர் ஸ்டுடியோவில் மதுபோதையில் இறந்து கிடந்த பரிதாபம்
1 min read
25.2.2020
பிரபல பாடகரும் பாப் நட்சத்திரமுமான மிகா சிங்கின் மேலாளர் சௌமியா பிப்ரவரி 3 ஆம் தேதி அவரது அந்தேரி இல்லத்தில் இறந்து கிடந்தார். போலீஸ் விசாரணை தகவல்களின்படி, அவர் போதைப்பொருள் அதிகமாக உட்கொண்டு இருந்ததால் அவர் இறந்த போனதாக தெரியவந்துள்ளது. சௌமியா சாமி கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் கூறினர்.
30 வயதான சௌமியா சாமி பிப்ரவரி 3 ஆம் தேதி காலை 7 மணிக்கு மது விருந்தில் பங்கேற்றுவிட்டு திரும்பி வந்தார், மாலை வரை அவர் வெளியே வரவில்லை. இரவு 10.15 மணியளவில், ஸ்டுடியோவின் தரை தளத்திலிருந்து சில தொழிலாளர்கள் மாடிக்குச் சென்றபோது, அந்த பெண் அறையில் கிடந்ததைக் கண்டார்கள்.
இதையடுத்து சௌமியாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
சௌமியாவின் உடல் பஞ்சாபில் உள்ள அவரது உறவினர்களிடம் இறுதி சடங்குகளுக்காக ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டதாகவும், போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக இறந்ததால் இறந்ததாகவும், மனச்சோர்வு காரணமாக அவர் மிகா சிங்கின் ஸ்டுடியோவின் முதல் தளத்தில் தனியாக தங்கியிருந்ததாகவும் போலீசார் விசாரணைக்கு பின் தெரிவித்தனர் .
இன்ஸ்டாகிராமில் பிரபல பாடகர் மிகா சிங் தனது மேனேஜர் சௌமியா இறந்ததற்கு இரங்கலைத் தெரிவித்திருந்தார் எங்கள் அன்பான சௌம்யா சாமி எங்களை பரிதவிக்க விட்டுவிட்டார், எங்களுடன் தனது அழகான நினைவுகளை விட்டுவிட்டு அவர் இந்த உலகத்தை விட்டு போய்விட்டார் மிக இளம் வயது. கடவுள் அவளுடைய ஆன்மாவை நிம்மதியாக ஆசீர்வதிக்க வேண்டும்.. அவரது குடும்பத்தினருக்கும் அவரது கணவர் ஜோஹேப் கானுக்கும் எனது மனமார்ந்த இரங்கல் ” என்று தெரிவித்துள்ளார்.