55 எம்.பி., பதவிகளுக்கு மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு
1 min read25.2.2020
தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் திருச்சி சிவா, ரங்கராஜன், முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா, கே.செல்வராஜ் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதி நிறைவடைகிறது.
இதனையடுத்து காலியாகும் 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் பிப்.25ம் தேதி அறிவித்துள்ளது.
இந்த தேர்தலுக்கான அறிவிப்பாணை மார்ச் 6-ம் தேதி வெளியிடப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 13-ம் தேதி. மனுக்களை திரும்ப பெற மார்ச் 18-ம் தேதி கடைசி நாள். மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பின்னர் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.