திருவானைக்கா கோவிலில் புதையலாக கிடைத்த தங்க காசுகள்
1 min readGold coins found at the Thiruvanaika temple
திருவானைக்கா கோவிலில் பூமிக்கு அடியில் இருந்து 505 தங்க காசுகள் கிடைத்துள்ளன.
திருவானைக்கா கோவில்
திருவானக்கா கோவில் ஜம்புகேசுவரர் கோவில் உள்ளது. மிக பிரமாண்டாய் கட்டப்பட்டுள்ள இந்தக் கோவில் ஐம்பூத ஸ்தலங்களில் நீர் தலமாக உள்ளது. புராண சிறப்புகள் கொண்ட இந்தக் கோவில் மூலஸ்தானில் எப்போதும் தண்ணீர் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும்.
இந்த கோவிலில், பிரசன்ன விநாயகா் சன்னதிக்கு பின்புறம் அதாவது அகிலாண்டேசுவரி அம்மன் சன்னதிக்கு எதிா்ப்புறம் வாழைத் தோட்டம் ஒன்று இருக்கிறது.
அந்த இடத்தை சுத்தம் செய்து நந்தவனமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக நேற்று (புதன்கிழமை) தொழிலாளர்கள் சுத்தம் செய்து தோண்டிக்கொண்டிருந்தனர்.
தங்க காசுகள்
அப்போது உதியம் மரத்தின் கீழ்புறத்திலுள்ள மணல் பகுதியில் சிறிய செம்பால் ஆன உண்டியல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து கோவில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து உண்டியலை உடைத்து பார்த்தபோது அதில் 505 தங்க காசுகள் இருந்தன. இவற்றில் 504 தங்கக் காசுகள் சற்று சிறியதாகவும், ஒரு காசு பெரியதாகவும் இருந்தது.
இவற்றின் மொத்த எடை ஒரு கிலோ 716 கிராம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதைத் தொடா்ந்து தங்கக்காசுகளை வட்டாட்சியா், மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைத்தாா். இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மன்னர்கள் காலத்தில் எதிரிகளுக்கு பயந்து பாதுகாப்புக்காக இந்த தங்க நாயணங்களை புதைத்து வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.