April 26, 2024

Seithi Saral

Tamil News Channel

மார்ச் மாத ராசி பலன்

2 min read

கணித்தவர்/ பண்டித காழியூர் நாராயணன்

Rasi Palan For March-2020

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன்,ராகு ஆகியோரின் நன்மைகள் தொடரும். புதன்11-ந் தேதி வக்கிரம் நிவர்த்தி அடைந்து கும்ப ராசிக்கு மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். 14-ந் தேதி சூரியன் வரை நற்பலனை கொடுப்பார். சூரியனால் மாதத் முற்பகுதியில் மதிப்பு, மரியாதை இருக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசின் உதவி கிட்டும்.
குருவால் தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.அவர் 27-ந் தேதி அதிசாரம் பெற்று 10-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. பொருள் நஷ்டத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப் பார்வை மிக சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம்.
குடும்பம்: குடும்பத்தில் முன்னேற்றமான சம்பவங்கள் நடக்கும். பெண்களின் ஆதரவு இருக்கும். பெண்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். 26,27,28-ந் தேதிகளில் சகோதரிகள் மூலம் முன்னேற்ற சம்பவங்கள் நடக்கும். 21,22,23-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 6,7-ந் தேதிகளில் அக்கம் பக்கத்தினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்: அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 14-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம். மாதத் பிற்பகுதியில் சிலர் இடமாற்றத்தை சந்திக்க நேரிடும். 19,20-ந் தேதிகளில் சிறப்பான பலன்கள் நடக்கும். எதிலும் வெற்றி காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரம்: தொழிலில் லாபம் இருக்கும். அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.14-ந் தேதிக்கு பிறகு பொருள் இழப்பு வரலாம். செலவு அதிகரிக்கும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். வீண் செலவை குறைக்கவும். 10,11-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.1,2,3,24,25,29,30-ந் தேதிகளில் உங்கள் முயற்சிகளில் தடை ஏற்படும். பொருள் விரையம் உருவாகலாம்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் வரும் பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைப்பதில் தாமம் ஆகலாம். 1,2,28,29-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்: புதனால் கல்வி, கேள்விகளில் சிறந்த நிலையில் இருப்பர். ஆசிரியர்களின் ஆலோனை கிடைக்கும். தேர்வை சிறப்பாக எழுவீர்கள்.அதில் வெற்றியும் பெறுவீர்கள்.
விவசாயம் சீராக நடக்கும். உழைப்புக்கு தகுந்த வருவாய் கிடைக்கும். நெல், கரும்பு மற்றும் பழ வகைகள் நல்ல மகசூலை தரும். கால்நடைச் செல்வம் பெருகும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை. வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள்: கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும். 4,5,31-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 12,13,14 ஆகிய தேதிகளில் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம். சகோதரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். கேதுவால் சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.
உடல்நலம்: மருத்துவச் செலவு குறையும். உடல் உபாதைகள் பூரண குணம் அடையும். 23-ந் தேதிக்கு பிறகு உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். .பயணத்தின் போது சற்று கவனம் தேவை. 17,18 -ந் தேதிகளில் வயிறு தொடர்பான பாதிப்பு வரலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஒருவித பயம் ஆட்கொள்ளும். 15,16-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை. தூரத்து உறவு வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம்.
அதிர்ஷ்டம்: அதிர்ஷ்ட எண் 2,3. பச்சை, வெண்மை ஆகியவை நலம் தரும் நிறங்கள். 4,5,10,11,12,13,14,19,20,21,22,23,26,27,28,31ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம். சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள்.பார்வை யற்றவர்களுக்க இயன்ற உதவி செய்யுங்கள். 14-ந் தேதிக்கு பிறகு காலையில் எழுந்து சூரியனை தரிசனம் செய்யுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் சூரியன் 15-ந் தேதி இடமாறுகிறார். ஆனாலும் அவர் தொடர்ந்து நற்பலனை கொடுப்பார். புதன்11-ந் தேதிக்கு பிறகும், குரு,சுக்கிரன் 27-ந் தேதிக்கு பிறகும் நன்மைகளை தருவார்கள்.
இது வரை மன வேதனை, நிலையற்ற தன்மை,பொருளாதார சரிவு, வீண் விரோதம் ஆகியவற்றை கொடுத்து வந்த குருபகவான் 27-ந் தேதி அதிசாரம் பெற்று 9-ம் இடமான மகர ராசிக்கு வருகிறார். இது மிகச்சிறப்பான இடம். அவரால் பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள்.தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள்உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.
எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம். பணப் புழக்கத்திற்கு குறை இல்லை. பொருளாதார வளம் சிறப்பாகவே இருக்கும். 14-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.அரசின் உதவி கிட்டும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
குடும்பம்: முன்னேற்றமான சம்பவங்கள் நடக்கும். 11-ந் தேதிக்கு பிறகு பெண்களின் ஆதரவு இருக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும். கணவன்- மனைவி இடையே அன்பு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். 22,23-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள்.8,9-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் 24,25-ந் தேதிகளில் சொந்த பந்தங்கள் வருகை இருக்கும். அவர்கள் மூலம் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம்.
உத்தியோகம்: வேலைப்பளு, வீண் மனக்கவலை 11-ந் தேதிக்கு பிறகு மறையும். உங்கள் திறமை பளிச்சிடும். சக பெண்ஊழியர்கள்மிகவும் ஆதரவுடன் இருப்பர். புதனின் பலத்தால் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். கோரிக்கைகள் நிறைவேறும். 21,22,23-ந் தேதிகளில் உன்னதமான பலனை காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். 14-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும்.
வியாபாரம்: சிறப்பாக நடக்கும். தொழில் வளர்முகமாக இருக்கும். லாபம் குறையாது. 12,13,14-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் சிடைக்கும்.14-ந் தேதிக்கு பிறகு அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.வங்கி கடன் எளிதாக கிடைக்கும். 4,5,26,27,28,31-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். 28-ந் தேதிக்கு பிறகு தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
கலைஞர்கள்: காரியத்தடை. பொருள் நஷ்டம் முதலியன 28-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.வளமான பலனை பெறலாம். புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல் வாதிகள் பொதுநலசேவகர்கள் நல்ல பெயரையும் பொருளாதர வளத்தையும் பெறுவர்.10,11-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்: நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.27-ந் தேதிக்கு பிறகு சிலர்வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்க பெறுவர்.
விவசாயிகளின்: வருமானத் திற்கு குறையிருக்காது. தேவையான மகசூலை பெறலாம்.நெல், மஞ்சள், பழ வகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானத்தை காணலாம். கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபத்தை பெறலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணத்தை தற்காலிகமாக ஒத்தி போடுங்கள். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்
பெண்கள்: குதூகலமாக இருப்பர். கணவரின் அன்பு கிடைக்க பெறுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.6,7-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.15,16-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக இருக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். .சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 11-ந் தேதிக்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.
உடல் நலம்: உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் 23-ந் தேதிக்கு பிறகு பூரண குணம் அடையும். 19,20-ந் தேதிகளில் சிறுசிறு வயிறு பிரச்சினை வரலாம். சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். ஒருவித பயம் ஆட்கொள்ளும். 17,18-ந் தேதிகளில் வீண் விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். மௌனவிரதத்தை கடைபிடிப்பது நல்லது.பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: அதிர்ஷ்ட எண்கள் 1,9 ஆகியவை ஆகும். செந்தூரம் ,பச்சை, வெண்மை அதிர்ஷ்ட நிறங்கள்ஆகும்.1,2,3,6,7,12,13,14,15,16,21,22,23,24,25,29,30ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: சனிக்கிழமை சனிபகவானுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். பார்வையற்றவர் களுக்கு உதவுங்கள். செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டு துவரை தானம் செய்யலாம். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மேலும் துர்க்கை வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும்.28-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி வழிபடுங்கள்.

மிதுனம்

                   கடகம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் சூரியன் 15-ந் தேதி சாதகமான இடத்திற்கு வருகிறார்.புதன்11-ந் தேதி வரையும், குரு 27-ந் தேதி வரையும், சுக்கிரன்28-ந் தேதி வரையும் நற்பலனை தருவார்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். காரியங்கள் நிறைவேறும். குறிப்பாக 14-ந் தேதிக்கு பிறகு அதிக பலனை பெறாலாம். உங்கள் மீது இருந்து வரும் பொல்லாப்பு மறையும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும்.
குருபகாவன் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். அவர் 27-ந் தேதி அதிசாரம் பெற்று 8-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. அவர் மன வேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார். இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது.அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். அவரது பார்வையால் மந்த நிலை மாறும். துணிச்சல் பிறகும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
குடும்பம்: கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். பண வரவு இருக்கும். கூடும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். குறிப்பாக 26,27,28-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் இருக்கும். ஆனால் 10,11-ந் தேதிகளில் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். 4,5,31-ந் தேதிகளில் சகோதரிகள் மூலம் அதிக உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகம்: முன்னேற்றமான பலனை பெறுவர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு எந்த தடையும் கிடையாது.24,25-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக இருக்கும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கை- களை 11-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அதன்பிறகு பொறுமையுடன் இருக்கவும், விட்டுக் கொடுத்து போகவும்.
வியாபாரம்: கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் நல்ல லாபத்தை தரும். செவ்வாய் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும்.பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். 11-ந் தேதிக்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும்.15,16-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். 1,2,3,6,7,29,30 ஆகிய தேதிகளில் சிறுசிறு தடைகள் வரலாம்.
கலைஞர்கள்: சிறப்பான நிலையில் இருப்பர்.புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறலாம். 28-ந் தேதியில் இருந்து எதிரிகள் தொல்லை இருக்கும். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்காது.அரசியல்வாதிகள்,பொதுநல சேவகர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
மாணவர்கள்:முன்னேற்ற நிலையில் காணப்படுவர். கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். கல்வியில் சிறப்படைவர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.28-ந் தேதிக்கு பிறகு சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம். கவனம் தேவை.
விவசாயிகள் கரும்பு, எள், காய்கறி மற்றும் பசு வகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானம் வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள்:கணவனின் அன்பு கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.8,9-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.17,18-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வரும் வாயப்பு கிடைக்கும்.
உடல்நலம்: சிறப்பாக இருக்கும். செவ்வாயால் 23-ந் தேதிக்கு பிறகு உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். 21,22,23-ந் தேதிகளில் வயிறு தொடர்பான சிறுசிறு உபாதைகள் வரலாம்.சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். ஒருவித பயம் ஆட்கொள்ளும். 19,20-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்:அதிர்ஷ்ட எண்கள் 5,6 ஆகியவை ஆகும். வெள்ளை, மஞ்சள் ஆகியவை அதிர்ஷ்ட நிறங்களாகும். 4,5,8,9,15,16,17,18,24,25,26,27,28,31 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: சனிக்கிழமை சனி பகவானை வழிபட்டு காக்கைக்கு எள் சோறு போடுங்கள். ராகுவுக்கும் கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கை மற்றும் பைரவருக்கு பூஜை செய்யலாம். செவ்வாய்க் கிழமை முருகனை வழிபடுங்கள்.15-ந் தேதிவரை தினமும் காலையில் சூரியனை வழிபடவும். 27-ந் தேதிக்கு பிறகு வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் சனி, கேதுவின் நற்பலன்கள் தொடரும். அதோடு செவ்வாய் 23-ந் தேதி வரையிலும், புதன்11-ந் தேதிக்கு பிறகும், குரு 27-ந் தேதிக்கு பிறகும், சுக்கிரன் 28-ந் தேதிக்கு பிறகும் நற்பலனை கொடுப்பார்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கம். காரிய அனுகூலம் ஏற்படும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். செவ்வாயால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.
குரு பகவான் 27-ந் தேதி அதிசாரம் பெற்று 7-ம் இடத்திற்கு செல்வது மிகவும் உயர்வான நிலை. குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வை தருவார். புதிய பதவி கிடைக்கும். மன தளர்ச்சி மறையும். மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. குருவின் பார்வையால் பொருளாதார வளம் மேம்படும்.
குடும்பம்: மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும்.11-ந் தேதிக்கு பிறகு உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். 6,7-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் முன்னேற்றம் காண்பீர்கள். விருந்து, விழா என சென்று வருவீர்கள் 1,2,3,29,30-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 12,13,14-ந் தேதிகளில் அவர்கள் வகையில் ஒதுங்கி இருப்பது நல்லது. 14-ந் தேதிக்கு பிறகு வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
உத்தியோகம்: போலீஸ் மற்றும் ராணுவத் துறையினர் முன்னேற்றம் காண்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 23-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். 11-ந் தேதிக்கு பிறகு சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். அரசு ஊழியர்களுக்கு இருந்து வரும் பிரச்சினை மறையும்.26,27,28-ந் தேதிகளில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரிகள்: உங்கள் ஆற்றல் மேம்படும். கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய தொழில் அனு கூலத்தை தரும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். அரசு வகையில் இருந்து வந்த பிரச்சினை 14-ந் தேதிக்கு பிறகு மறையும். அதுவரை வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். 17,18-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். 4,5,8,9-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். 27- ந் தேதிக்கு பிறகுதங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
கலைஞர்கள்: எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைப்பதில் தாமதமாகலாம். எதிரிகள் தொல்லை இருக்கும். 28-ந் தேதிக்கு பிறகு முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நற்பெயர் எடுப்பர். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும். நல்ல பணவரவும் கிடைக்கும்
மாணவர்கள்: அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். 11-ந் தேதிக்கு பிறகு போட்டிகளில் வெற்றி காணலாம்.நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
விவசாயிகள்: காய்கறி, கீரை வகைகளில் சிறப்பான மகசூல் கிடைக்கும். ஆடுகள்,கோழி, பசு, கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் 23-ந் தேதிக்குள் பயன்படுத்திக் கொள்ளவும். அதன்பிறகு வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள்: சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். குரு பகவான் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 11-ந் தேதிக்கு பிறகு பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்சினை மறையும். 28-ந் தேதிக்கு பிறகு பண வரவு கூடும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும். 10,11-ந் தேதிகளில் பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 19,20-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள். சிறப்பான நாட்களாக இருக்கும். சகோதரர்களால் நற்சுகம் ஏற்படும். அவர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உடல்நலம்: சிறப்பாக இருக்கும். 11-ந் தேதிக்கு பிறகு பிள்ளைகள் உடல்நலம் பூரண குணம் அடையும். மருத்துவச் செலவு குறையும். 24,25-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம். 21,22,23-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை.வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்: அதிர்ஷ்ட எண்கள் 3,7 ஆகியவை ஆகும். சிவப்பு,ள் கறுப்பு ஆகியவை அதிர்ஷ்ட நிறங்கள்ஆகும்.1,2,3,6,7,10,11,17,18,19,20,26,27,28,29,30ஆகிய தேதிகள் அனு கூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யுங்கள்.ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் பைரவருக்கு பூஜை செய்யலாம்.23-ந் தேதிக்கு பிறகு செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம்.

                       சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் ராகுவின் நற்பலன்கள் தொடரும். புதன் 11-ந் தேதி வரையும்,குரு 27-ந் தேதி வரையும், சுக்கிரன் 28-ந் தேதி வரையும் நற்பலனை கொடுப்பார்கள்.மேலும் செவ்வாய் 23-ந் தேதி சாதமான இடத்துக்கு வந்து நற்பலனை கொடுப்பார். பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.
குரு 27-ந் தேதி அதிசாரம் பெற்று 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வை மிகவும் சாதகமாக காணப்படுகிறது. குருவின் பார்வை மூலம் எந்த இடையூறுகளையும் தடுத்து நிறுத்தலாம். குருவின் பார்வையால் உங்களது ஆற்றல் மேம்படும். துணிச்சல் பிறகும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
சூரியனால் உங்களுக்கு இருந்து வரும் அவமரியாதை 14-ந் தேதிக்கு பிறகு மறையும்.ஆனால் அதன்பிறகு அரசு வகையில் அனுகூலம் இல்லை.
குடும்பம்: திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் 28-ந் தேதிக்குள் நடைபெறலாம். மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுக்கிரனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். 8,9-ந் தேதிகளில் சகோதரிகள் உதவிகரமாக இருப்பர். அவர்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். 4,5,31-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் 15,16-ந் தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்:தனியார் துறையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காணலாம். அவர்கள் கோரிக்ககைள் நிறைவேறும்.புதிய பதவி தேடிவரும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக பெண்ஊழியர்கள்மிகவும் ஆதரவுடன் இருப்பர். 14-ந் தேதிக்கு பிறகு அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். அலைச்சல் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால் தான் கோரிக்ககைள் நிறைவேறும். 1,2,3,29,30-ந் தேதிகளில் சிறப்பான பலன்களை காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் முன்னேற்றத்தை காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 23-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.
வியாபாரிகள்: அதிக உழைப்பின் பேரில் வருமானத்தை பெருக்கலாம். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும் வியாபாரம் சிறக்கும். குறிப்பாக 19,20-ந் தேதிக்கு பிறகு திடீர் வருவாய் கிடைக்க வாய்ப்பு உண்டு. 14-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் பிரச்சினை வரலாம். எனவே கணக்கு வகையில் சற்று கவனம் தேவை. மேலும்6,7,10,11-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து 23-ந் தேதிக்கு பிறகு விடுபடுவர்.
கலைஞர்கள்: பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.17,18-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்: முன்னேற்ற பாதையில் செல்வர். மிகவும் சிறப்பான நிலையை அடைவர். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.
விவசாயிகள்: கடந்த சில மாதங்களாக இருந்த தொய்வு நிலை மாறும். நல்ல மகசூல் கிடைக்கும். 23-ந் தேதிக்கு பிறகு புதிய சொத்து வாங்க தருணம் வந்து விட்டது. கால்நடை வகையிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும்.விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்: மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவரின் அரவணைப்பு கிடைக்கும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். 23-ந் தேதிக்கு பிறகு புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். 12,13,14-ந் தேதிகளில் புத்தாடை, நகைகள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். மேலும் 21,22,23-ந் தேதிகளும் சிறப்பான நாட்களாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரர்களால் உதவி கிடைக்கும். பணம் கிடைக்கும்.
உடல்நலம்: வயிறு தொடர்பான உபாதைகள் 14-ந் தேதிக்கு பிறகு பூரண குணம் அடையும்.23-ந் தேதிக்கு பிறகு பிள்ளைகள் உடல்நலம் மேம்படும். 26,27,28-ந் தேதிகளில்ஒருவித பயம் ஆட்கொள்ளும்.வாயு தொடர்பான உபாதை வரலாம். 24,25-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 4,6 அதிர்ஷ்டமான எண்களாகும். நீலம், பால் வெண்மை சிறப்பை தரும் நிறங்கள் ஆகும்.1,2,3,4,5,8,9,12,13,14,19,20,21,22,23,29,30,31-ந் தேதிகள் அதிர்ஷ்ட நாட்களாகும்
வழிபாடு:தினமும் காலையில் சூரியனை வழிபட்டால் உடல்நலம் மேம்படும். சனிக்கிழமை பெருமாள் கோவிக்கு சென்று வரலாம். ஆஞ்சநேயர் வழிபாடு ஆறுதலையும், மகத்தான முன்னேற்றத்தையும் கொடுக்கும்.27-ந் தேதிக்கு பிறகு வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.அப்போது கொண்டை கடலை படைத்து தானம் செய்யவும்.

                         கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் கூடுதல் பலனை காணலாம். சூரியன் 14-ந் தேதி வரையிலும்,புதன் 11-ந் தேதிக்கு பிறகும், குரு 27-ந் தேதிக்கு பிறகும் நற்பலனை கொடுப்பார்கள். மேலும் சுக்கிரனின் நன்மைகளும் தொடரும். காரிய அனுகூலம் கிடைக்கும். வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.15-ந் தேதி சூரியன் சாதகமற்ற இடத்திற்கு செல்வதால் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
குரு பகவான் 27-ந் தேதி அதிசாரம் பெற்று உங்கள் ராசிக்கு 5-ம் இடத்துக்கு செல்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். மன உளச்சல் நீங்கும், உறவினர் வகையில் வீண் பகை மறையும். மேலும் அவரது 5,7-ம் இடத்துப்பார்வைகள் சாதகமாக அமையும். இதனால் மேலும் நன்மைகள் அதிகரிக்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
குடும்பம்: வீட்டுக்கு தேவையான சகல வசதியும் கிடைக்க பெறுவீர்கள்.11-ந் தேதிக்கு பிறகுதடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன்- மனைவி இடையே அன்னியோன்ய மான சூழ்நிலை இருக்கும். 10,11-ந் தேதிகளில் பெண்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். 6,7 ஆகிய தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். ஆனால் 17,18-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்: சிறப்பாக இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும்.15-ந் தேதிக்குள் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அதன்பிறகு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. இருப்பினும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு எந்த தடையும் கிடையாது. 4,5,31-ந் தேதிகளில் எதிர்பாராத நற்பலன் கிட்டும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். 27-ந் தேதிக்கு பிறகுசக பெண்ஊழியர்கள்மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
வியாபாரிகள்: சிறப்பான முன்னேற்றத்தை காண்பர். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். புதிய தொழில் சிறப்பாக நடக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள்.15-ந் தேதிக்கு பிறகு எதிரிகளின் இடையூறுகள் அவ்வப்போது வரும். ஆனாலும் பணவிஷயத்தில் எந்த பிற்போக்கான நிலையும் உருவாகாது. தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து 23-ந் தேதிக்கு பிறகு விடுபடுவர். 21,22,23 ஆகிய தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.8,9,12,13,14-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம்.27-ந் தேதிக்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
கலைஞர்கள்: நற்பெயரும் புகழும் கிடைக்க பெறுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.. பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். பொதுநல சேவகர்கள், அரசியல் வாதிகள் மேம்பாடு காண்பர்.19,20-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்: சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. இருப்பினும்11-ந் தேதிக்கு பிறகு புதன் சிறப்பாக அமைந்து உள்ளதால் மிகவும் சிறப்பான நிலையை அடைவர். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.27-ந் தேதிக்கு பிறகு சிலர்வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்க பெறுவர்.
விவசாயிகள்: நல்ல மகசூல் கிடைக்கும். நெல், கோதுமை, பழவகைகள், காய்கறிகள், கீரை வகைகள் மூலம் வருவாய் கிடைகும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள்: பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். சகோதரர்கள் மிக உறுதுணையாக இருப்பர். 27-ந் தேதிக்கு பிறகு குரு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.15,16-ந் தேதிகளில் புத்தாடை நகைகள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். மேலும் 24,25-ந் தேதிகளும் சிறப்பான நாட்களா அமையும்.விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் உதவி கிடைக்கும். பணம் கிடைக்கும்.
உடல்நலம்: சுமாராக இருக்கும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. 14-ந் தேதிக்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். 26,27,28-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை. மௌனவிரதத்தை கடைபிடிப்பது நல்லது. 1,2,3,29,30-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.ஒருவித பயம் ஆட்கொள்ளும். .வாயு தொடர்பான உபாதை வரலாம்.
அதிர்ஷ்டம்: 7,8 ஆகியவை அதிர்ஷ்ட எண்களாகும்.வெள்ளை,15-ந் தேதி வரை செந்தூரம் நலம் தரும் நிறங்கள்.4,5,6,7,10,11,15,16,21,22,23,24,25,31ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரங்களை வலம் வாருங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கும். சன்னியாசி களுக்கும் இயன்ற உதவி செய்யுங்கள்.கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். செவ்வாய்க்கிழமை முருகனை வணங்குங்கள். துர்க்கை வழிபாடு உங்கள் துயரத்தை போக்கி மனத்தைரியத்தை வரவழைக்கும்.

                  துலாம்

துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் புதன் 11-ந் தேதி வரையும்,செவ்வாய் 23-ந் தேதி வரையும் நன்மைகள் தருவார்கள். மற்றும் சூரியன் 15-ந் தேதியும் சுக்கிரன் 28-ந் தேதியும் சாதகமான இடத்திற்கு வருகிறார்கள். மேலும் சனி,கேது ஆகியோர் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார்கள். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். காரிய அனுகூலம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பணப்புழக்கம் இருக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும்.
குருபகாவன் 27-ந் தேதி அதிசாரம் பெற்று 4-ம் இடமான மகர ராசிக்கு செல்கிறார். இந்த இடம் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியாது. இதனால் மன உளச்சலையும், வீண்பகையையும் உருவாக்குவார்.ஆனால் 28-ந் தேதிக்கு பிறகு சுக்கிரன் 8-ம் இடத்தில் இருப்பதால் வசதிகள் பெருகும்.பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
குடும்பம்: மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும்.தேவையான பொருட்கள் கிடைக்கும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் உண்டு. கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும்.12,13,14ஆகிய தேதிகளில் சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். 8,9-ந் தேதிகளில் விருந்தினர்கள் வருகையும், அவர்களால் உபகாரமும் ஏற்படும். ஆனால் 19,20-ந் தேதிகளில் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்: போலீஸ் மற்றும் ராணுவத்தினர் சிறப்பான பலனை பெறுவர். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மேல் அதிகரிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 11-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.14-ந் தேதிக்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்துசெல்ல நேரிடலாம்.6,7-ந் தேதிகளில் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரிகள்: பொருளாதார வளம் இருப்பதால் வேண்டிய பொருட்கள் தாராளமாக கிடைக்கும். தொழிலில் லாபம் குறையாது. வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.14-ந் தேதிக்கு பிறகு வேலைப்பளு குறையும். எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். ஆனால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.24,25-ந் தேதிகளில் திடீர் பணவரவுக்கு இடமுண்டு. 10,11,15,16-ந் தேதிகளில் சந்திரனால் தடை வரலாம்.பண விரயம் ஆகலாம்.
கலைஞர்கள்: பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் 28-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். மேம்பாடு காண்பர். எதிர்பார்த்த பதவி,புகழ் கிடைக்கும்.
மாணவர்கள்: கல்வியில் சிறப்படைவர். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.11-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும்.
விவசாயம்: சிறப்பான வருமானத்தை காண்பர்.பாசி பயறு நெல், கோதுமை, எள், கொள்ளு,துவரை, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். ஆடுகள், கோழி, பசு-கன்றுகள் மூலம் நல்ல பணப்புழக்கத்தை எதிர்பார்க்கலாம்.புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள்: சிறப்பான பலனை காணலாம். உங்களால் குடும்பம் சிறக்கும். கணவரின் அன்பு கிடைக்கும்.குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உத்தியோகம் பார்க்கும் பெண்கள் வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு லாபத்துக்கு குறை இருக்காது. பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 17,18-ந் தேதிகளில் புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 26,27,28-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள்.சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உடல்நலம்: சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். 23-ந் தேதிக்கு பிறகு தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். வயிறு பிரச்சினைவரும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.4,5,31-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு, வாயு தொடர்பான உபாதை வரலாம்.21,22,23-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம். 1,2,3,29,30-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை. தூரத்து உறவு வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம்.
அதிர்ஷ்டம்: 1,5 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். கறுப்பு 14-ந் தேதிக்கு பிறகு செந்தூரம் நலம் தரும் நிறங்கள். 6,7,8,9,12,13,14,17,18,24,25,26,27,28 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: வெள்ளிக்கிழமை சுக்கினுக்கு அர்ச்சனை செய்யுங்கள். அப்போது சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி வழிபடுங்கள். ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ காயத்திரி தேவியை வணங்கி வரவும்.ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் பைரவருக்கு பூஜை செய்யலாம். 14-ந் தேதி வரை சூரியனை தரிசனம் செய்யுங்கள்.11-ந் தேதிக்கு பிறகு புதன்கிழமை குலதெய்வத்தை வணங்குங்கள். ஏழைகளுக்கு பாசி பயறு தானம் செய்யலாம்
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே! கடந்த காலங்களில் பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்த உங்களுக்கு 11-ந் தேதிக்கு பிறகு நிவாரணம் கிடைக்கும். ஆம் குடும்பத்தில் இருந்து வரும் பிரச்சினை அடியோடு மறையும். மனதில் ஒரு தெளிவு உண்டாகும். இந்த மாதம் புதன் 11-ந் தேதியும், செவ்வாய் 23-ந் தேதியும் சாதகமான இடத்திற்கு வருகிறார்கள்.
குருவால் பண வரவு சிறப்பாக இருக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். அவர் 27-ந் தேதி அதிசாரம் பெற்று மகர ராசிக்கு செல்கிறார். அப்போது அவரால் சிறு,சிறு தடை ஏற்படும். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின்பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும்.
குடும்பம்: 11-ந் தேதிக்கு பிறகு பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே அன்னியோன்ய மான சூழ்நிலை இருக்கும்.23-ந் தேதிக்கு பிறகு பக்தி உயர்வு மேம்படும். கடவுனிள் கருணை உங்களுக்கு கிடைக்கும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். திருட்டு களவு பயம் இனி இருக்காது. 15,16 ஆகிய தேதிகளில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். 10,11-ந் தேதிகளில் உறவினர்களால் உதவி கிடைக்கும். 21,22,23-ந் தேதிகளில் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். 23-ந் தேதி வரை நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
உத்தியோகம்: வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.11-ந் தேதிக்கு பிறகு மேல் அதிகாரிகளின் ஆதரவும் அனுசணையும் வந்து சேரும். கோரிக்கைகள் நிறைவேறும். 23-ந் தேதிக்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.8,9-ந் தேதிகளில் முள்னேற்றமான சம்பவங்கள் நடக்கும்.முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்
வியாபாரம்: பகைவர்களின் தொல்லைகள் உங்களுக்கு தடையை தந்தாலும் பொருளாதார வகையில் எந்த பின்தங்கிய நிலை வராது. அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு 11-ந் தேதிக்கு பிறகு மறையும். தொழிலில் எந்த பெண்களால் உங்களுக்கு பிரச்சினை வந்ததோ அதே பெண்கள் 14-ந் தேதிக்கு பிறகு உதவிகரமாக இருப்பர்.23-ந் தேதிக்கு பிறகு கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும்.26,27,28-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். 12,13,14,17,18-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலலம்.பண விரயம் ஆகலாம்.
கலைஞர்கள்: முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். 23-ந் தேதிக்கு பிறகு அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் சிறப்பான பலனை பெறலாம். புதிய பதவி பெற வாய்ப்பு இருக்கிறது. 24,25-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்: குருவால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். 11-ந் தேதிக்கு பிறகு தேர்வு சிறப்பாக இருக்கும்.கல்வியில் சிறப்படைவர். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.
விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். 11-ந் தேதிக்கு பிறகு ஆடு, மாடு மூலம் நல்ல வளம் கிடைக்கும். பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். 23-ந் தேதிக்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள்: மகிழ்ச்சியுடன் காணப்படுவர். 11-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும்.19,20ஆகிய தேதிகள் குதூகலமான நாட்களாக அமையும். புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.1,2,3,29,30-ந் தேதிகளில் விருந்து, விழாவுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 23-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 27-ந் தேதிக்கு பிறகு குருவின்பார்வையால் தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.
உடல்நலம்: சீராக இருக்கும்.6,7-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு, வாயு தொடர்பான உபாதை வரலாம். 4,5,31-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 6,7 அதிர்ஷ்ட எண்ஆகும்.மஞ்சள், பச்சை நலம் தரும் நிறங்கள். 1,2,3,8,9,10,11,15,16,19,20,26,27,28,29,30ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை வழிபட்டு வாருங்கள். தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம்.சனிக்கிழமை பெருமாளையும், வியாழக்கிழமை சிவனையும் வழிபடுங்கள்.ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் 14-ந் தேதி வரை சூரியனும், 28-ந் தேதி வரை சுக்கிரனும்,27-ந் தேதிக்கு பிறகு குருவும் நற்பலனை கொடுப்பார்கள்.இதனால் எந்த ஒரு காரியத்தையும் துரிதமாக செய்து முடிக்கலாம். குருபகவான் 27-ந் தேதி அதிசாரம் பெற்று 2-ம் இடமான மகர ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான அம்சம். இதுவரை குருவால் ஏற்பட்டு வந்த இடர்பாடுகள் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறகும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
குடும்பம்: பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். பக்தி உயர்வு மேம்படும். .சகோதரிகள் மிகவும் உறுதுணையாக இருப்பர். குறிப்பாக 17,18-ந் தேதிகளில் அவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும். 12,13,14-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 24,25-ந் தேதிகளில் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்குக்கு பாதிப்பு,வீண் மனக்கவலை முதலியன 11-ந் தேதிக்கு பிறகு மறையும்.23-ந் தேதிக்கு பிறகு சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம்.
உத்தியோகம் அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். சுக்கிரனால் கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர்.14-ந் தேதிக்கு பிறகு சகபெண் ஊழியர்கள் வகையில் ஒதுங்கி இருக்கவும். 10,11-ந் தேதிகளில் உன்னதமான பலன்களை எதிர்பார்க்கலாம். முக்கிய கோரிக்கை களை அப்போது வைக்கலாம்.23-ந் தேதிக்கு பிறகு நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
வியாபாரம்: குடும்ப பெரியோர்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.11-ந் தேதிக்கு பிறகு அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். 27-ந் தேதிக்கு பிறகு தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.15,16,19,20-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். 1,2,3,29,30-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.
பொதுநலம்- கலைஞர்கள் சிலர் தனியார் அமைப்புகளிடம் இருந்து விருது பாராட்டு பத்திரம் போன்றவை கிடைக்க பெறலாம். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி கரமாக இருப்பர். பண வரவும் சிறப்பாக இருக்கும். பொதுநல சேவகர்கள் சுமாரான பலனை காண்பர்.அரசியல்வாதிகள் நல்ல பணப் புழக்கத்தில் இருந்தாலும் எதிர் பார்த்த பதவி கிடைக்காது. 26,27,28-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்: பிற்போக்கான நிலையில் இருந்து இந்த மாதம் விடுபடுவர். 27-ந் தேதிக்கு பிறகு குருவால் கல்வி வளம் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையும் கிடைக்க பெறுவீர்கள். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர்வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்க பெறுவர்.
விவசாயம்- விளைச்சல் சிறப்பாக இருக்கும். குறிப்பாக பயறு வகைகள் காய்கறி பயிர்கள் நல்ல மகசூலை தரலாம்.புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை. வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.
பெண்கள்: குடும்பத்தரிடம் நன்மதிப்பை பெறுவர். உங்களால் வீட்டிற்கு பெருமை கிடைக்கும்.உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். .தோழிகள் உதவிகரமாக இருப்பர். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் அதிக லாபத்தை எதிர்ப்பார்க்கலாம். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 21,22,23ஆகிய தேதிகளில் நகை ஆபரணங்கள் வாங்கலாம். சிலர் விருந்து விழா என சென்று வருவர்.பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 4,5,31-ந் தேதிகளில் சிறப்பான நாட்களாக அமையும். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும்.
உடல்நலம்: சிறப்படையும். 14-ந் தேதிக்கு பிறகு சிறு சிறு உபாதைகள் வரலாம். ஆனாலும் பாதிப்பு ஏதும் வராது.8,9-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். 6,7-ந் தேதிகளில் வீண் விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை. தூரத்து உறவு வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம்.
அதிர்ஷ்டம்- 4,6 அதிர்ஷ்டமான எண்கள்.வெள்ளை,செந்தூரம் ஆகிய நிறங்கள் அதிர்ஷ்டத்தை தரும் நிறங்கள் ஆகும்.1,2,3,4,5,10,11,12,13,14,17,18,21,22,23,29,30,31 ஆகிய தேதிகள் நன்மை தரும் நாட்களாக அமையும்.
வழிபாடு: செவ்வாய்க் கிழமை முருகனை வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். விநாயகர் துதியும் ஆஞ்சநேயர் வழிபாடும் உங்களுக்கு பயன் உள்ளதாக அமையும். ஏழைகளுக்கு மொச்சை தானம் செய்யுங்கள். நவக்கிரகங்களில் ராகுவுக்கும் கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள்.புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.

                      மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் ராகு மற்றும் சுக்கிரனின் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். அதோடு சூரியன் 15-ந் தேதி சாதகமான இடத்திற்கு வருகிறார். இதனால் பொருள் விரயம் குறையும். காரிய அனுகூலம் ஏற்படும். உங்களுக்கு இருந்து வந்த அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். புதனால் வீட்டினுள் இருந்த பிரச்சனை, அக்கம் பக்கத்தினர்கள் வகையில் மனக்கிலேசம், பொருள் இழப்பு முதலியன 11-ந் தேதிக்கு பிறகு மறையும்.
குரு பகவான் 27-ந் தேதி அதிசாரம் பெற்று உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. கலகம் விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. இதனால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
குடும்பம்: சுக்கிரனால் வீட்டில் மகிழ்ச்சியும், குதூகலமும் குடிகொண்டிருக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். 28-ந் தேதிக்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும்.பக்தி உயர்வு மேம்படும்.19,20-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் உதவிகரமாக இருப்பர். அவர்களால் பணம் கிடைக்கும். 15,16-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் அனுகூலமான போக்கும் ஏற்படும்.அதே நேரம் 26,27,28-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு வரவாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்: தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் உங்கள் திறமைக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.இடமாற்றத்தை காணலாம்.28-ந் தேதிக்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். 12,13,14-ந் தேதிகளில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரிகள்: லாபத்திற்கு குறை இருக்காது. பணவிரயம் இருக்கும். அரசின் சலுகை கிடைக்கும். 28-ந் தேதிக்கு பிறகு கோவில் மற்றும் புண்ணிய காரியங்- களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்..4,5,31-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். 17,18,21,22,23-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம்.வெளியூர் பயணம் ஏற்படும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் பெற்று நல்ல பொருளாதார வளத்தை காண்பர். மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. 1,2,3,29,30-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம் சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும். 27-ந் தேதிக்கு பிறகு குருவின்பார்வையால் கல்வி சிறப்பாக அமையும் என்பதால் எதையும் துணிந்து செயலாற்றுங்கள். நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும்.
விவசாயிகள்: வருமானத்திற்கு குறை இருக்காது. குறிப்பாக நெல், கோதுமை சோளம் போன்றவற்றில் சிறப்பான மகசூல் கிடைக்கும். வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள்:அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். பொதுவாக எந்த பிரச்சினையிலும் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும். 28-ந் தேதிக்கு பிறகு தோழிகள் உதவிகரமாக இருப்பர். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். கணவரின் அன்பு கிடைக்க பெறுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 24,25-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 6,7-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உடல்நலம்: கண்தொடர்பான உபாதை 14-ந் தேதிக்கு பிறகு பூரண குணம் அடையும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் மற்றும் பொருள் விரயம் முதலியன 23-ந் தேதிக்கு பிறகு மறையும். 10,11-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு, வாயு தொடர்பான உபாதை வரலாம்.8,9-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 1,9 அதிர்ஷ்ட எண்களாகும். நீலம், வெள்ளை யோகம் தரும் நிறங்கள்.4,5,6,7,12,13,14,15,16,19,20,24,25,31ஆகிய தேதிகள் அதிர்ஷ்ட நாட்களாக அமையும்
வழிபாடு: சனிஈசுவரன் வழிபாடும் தொடரவேண்டும்.செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம். புதன் கிழமை குல தெய்வத்தை வணங்குங்கள். ஏழைகளுக்கு பாசி பயறு தானம் செய்யலாம். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். 15-ந் தேதி வரை தினமும் காலையில் சூரியனை வணங்கி ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் செவ்வாய் 23-ந் தேதி வரையும் குரு 27-ந் தேதி வரையும் சாதகமான இடத்தில் இருந்து நற்பலனை தருவார்கள். அதோடு சனி,கேது, சுக்கிரனின் ஆதரவு தொடரும். பொருளாதார வளம் அதிகரிக்கும். காரிய அனுகூலம் கிடைக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும்.பொன், பொருள் கிடைக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.
குருவால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். குரு பகவான் 27-ந் தேதி அதிசாரம் பெற்று உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு வருகிறார். இது சுமாரான நிலையே. இங்கு அவரால் பொருள் விரயம் ஏற்படும். மனதில் வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும்.
குடும்பம்: வசதிகள் தொடர்ந்து கிடைக்கும். புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். 11-ந் தேதிக்கு பிறகு வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். அக்கம் பக்கத்தினர்கள் வகையில் மனக்கிலேசம் வரலாம். 26-ந் தேதிக்கு பிறகு உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். 21,22,23-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.17,18-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் 1,2,3,29,30-ந் தேதிகளில் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்:போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 23-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள்அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். உழைப்புக்கு மரியாதையும் வருமானமும் கிடைக்கும்.28-ந் தேதிக்கு பிறகு உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் வந்து சேரும்.15,16-ந் தேதிகளில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரம்: சிறப்பான பலன்களை காணலாம். பணப் புழக்கம் அதிகரிக்கும். எந்த தொழிலும் முன்னேற்ற பாதையில் செல்லும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். வியாபாரிகளுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.15-ந் தேதிக்கு பிறகு வீண் விரயம் இருக்கும். 6,7-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.19,20,24,25-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம்
கலைஞர்கள்: சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும். மதிப்பு, மரியாதை கூடும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். நல்ல பெயரையும் பொருளாதர வளத்தையும் பெறுவர். புதிய பதவி தேடி வரும்.
மாணவர்கள்: குருவால் துணிச்சல் பிறகும்.ஆசிரியர்கள் ஆலோசனை கிடைக்கும் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர்.
விவசாயிகள் தொய்வு நிலை மாறும். நல்ல மகசூல் கிடைக்கும். ஆடுகள்,கோழி வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் . புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் 23-ந் தேதிக்குள் பயன்படுத்திக் கொள்ளவும். பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள்: சிறப்பு அடையலாம். சகோதரிகள் மிக உறுதுணையாக இருப்பர். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர்.திருட்டு,களவு பயம் இருக்காது. பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடிவரும். 26,27,28-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்காலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 8,9-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். சகோதரர்களால் உதவி கிடைக்கும்.பணம் கிடைக்கும்.விருந்து விழா என சென்று வருவீர்கள்.
உடல்நலன்: சூரியனால் ஏற்பட்ட அவப்பெயர்,அலைச்சல், சோர்வு வயிறு தொடர்பான உபாதைகள் முதலியன 14-ந் தேதிக்கு பிறகு இருக்காது. ஆனால் அதன்பிறகு அவரால் வீண்விரயம் ஏற்படும். கண்தொடர்பான உபாதை வரலாம். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பொருள் விரயம் ஏற்படலாம்.12,13,14-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஒருவித பயம் ஆட்கொள்ளும். 10,11-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்: 7,8ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். சிவப்பு, வெள்ளை நலம் தரும் நிறங்கள்.6,7,8,9,15,16,17,18,21,22,23,26,27,28 ஆகிய நாட்கள் சிறப்பானவையாக அமையும்.
வழிபாடு: தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். புதன் கிழமை குல தெய்வத்தை வணங்குங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்28-ந் தேதிக்கு பிறகு வியாழக்கிழமை தட்சணாமூர்த்தியை வழிபடுங்கள்.அப்போது கொண்டை கடலை படைத்து தானம் செய்யவும். மஞ்சள் ஆடை தானம் கொடுக்கலாம்.

                        மீனம் 

மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரனின் நற்பலன்கள் மாதம் முழுவதும் கிடைக்கும். மேலும் புதன் 11-ந் தேதி வரையும், செவ்வாய் 23-ந் தேதியில் இருந்தும், குரு 28-ந் தேதியில் இருந்தும் நற்பலனை கொடுப்பார்கள்.மதிப்பு, மரியாதை இருக்கும்.
குருவால் ஏற்பட்ட பொருள் நஷ்டம், மன சஞ்சலம் முதலியன 27-ந் தேதிக்கு பிறகு மறையும்.அதன் பிறகு அதிசாரம் பெற்று உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திற்கு வருகிறார். அவரால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.மேலும் குருவின் 7 மற்றும் 9-ம் இடத்துப்பார்வைகள் சிறப்பாக அமைந்- துள்ளது. இதனால் தேவைகள் பூர்த்தி ஆகும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.
குடும்பம்: புதனால் எடுத்த காரியம் வெற்றி அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகள் கிடைக்கும். 23-ந் தேதிக்கு பிறகு புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.திருட்டு களவு பயம் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 24,25-ந் தேதிகளில் பெண்களின் ஆதரவு கூடுதலாக கிடைக்கும். 19,20-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 4,5,64-ந் தேதிகளில் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்: அரசு ஊழியர்களுக்கு உன்னதமான மாதமாக இருக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும்.தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு 23-ந் தேதிக்கு பிறகு பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும். 17,18-ந் தேதிகளில் எதிர்பாராத முன்னேற்ற சம்பவங்கள் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வணிகம்: சூரியனால் ஏற்பட்ட பொருள் விரையம், தொழிலில் நஷ்டம், இடமாற்றம் முதலியன 14-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு அலைச்சலும் சோர்வும் ஏற்படும் 23-ந் தேதிக்கு பிறகு வியாபாரம் நல்ல முன்னேற்றத்தை தரும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். 8,9-ந் தேதிகளில் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசிட மிருந்து எதிர்பார்த்த சலுகைகள் உதவிகள் கிடைக்கும். 21,22,23,26,27,28-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம்.
பொதுநலம்: கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். பொதுநல சேவகர்கள் அரசியல்வாதிகள் பதவியோடு பண வரவையும் காணலாம்.6,7-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்: முன்னேற்றம் காணலாம். நல்ல மதிப்பெண் கிடைக்கும். 27-ந் தேதிக்கு பிறகு குருவால் ஆசிரியர்கள் ஆலோசனை கிடைக்கும் மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர்வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்க பெறுவர்.
விவசாயம்: கால்நடை வகையில் வருமானம் கிடைக்கும். காய் கறிகள், கீரை, பழ வகைகள், பயறு வகைகள் மூலம் நல்ல வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் 23-ந் தேதிக்கு பிறகு நிறைவேறும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும்.
பெண்கள்: தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவி உயர்வுக்கு தடையேதும் இல்லை.சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். 23-ந் தேதிக்கு பிறகு பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும்.1,2,3,29,30 ஆகிய தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.10,11 ஆகிய தேதிகளில் சகோதரிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். அவர்களால் பணஉதவி கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
உடல்நலம்: சுமாராக இருக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய்,பயண பீதி முதலியன 23-ந் தேதிக்கு பிறகு மறையும். 15,16-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம். 12,13,14-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 3,5 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை, பச்சை நலம் தரும் நிறம்.1,2,3,8,9,10,11,17,18,19,20,24,25,29,30 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: சூரியனை வழிபட்டால் தடைகள் விலகும். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள். குறிப்பாக நீலம் மற்றும் பல வண்ணம் நிற துணிகளை கொடுத்து வாருங்கள். சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள். 11-ந் தேதிக்கு பிறகு புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.