திருமணத்திற்கு முன்பே மணப்பெண்ணை கொன்ற மணமகன்; ஸ்கூட்டி கேட்டதால்
1 min readBride who killed by Groom before her marriage; Because she gave Scooty
2/3/2020
திருமணத்திற்கு முன்பே வருங்கால கணவரிடம் ஸ்கூட்டி வாங்கித்தரும்படி கேட்ட பெண்ணை மணமகன் கழுத்தை நெரித்து கொலை செய்தான்.
திருமண நிச்சயம்
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டம் குர்பக்ஸ்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்தவர் சரிகா யாதவ் (வயது20). நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். பதாய் புர்வா கிராமத்தில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி இருந்து படித்து வருகிறார்.
இவருக்கும், மன்டோஷ் யாதவ் (24) என்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது. சரிகா, திருமணத்திற்கு சில பொருட்கள் வாங்குவதற்காக கடந்த 26 -ந் தேதி, மண்டோசுடன் வெளியே சென்றிருந்தார். ஆனால் இரவு அவர் வீடு திரும்பவில்லை.
கொலை
அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினார்கள். இந்த நிலையில் மறுநாள் அவரது உடல் அந்த கிராமத்திற்கு வெளியே கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சரிகாவுடன் கடைசியாக வெளியே சென்றவர் என்ற அடிப்படையில், மன்டோசிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சரிகாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். ராதாபுர் பகுதியில் உள்ள ஆளில்லா வீடு ஒன்றிற்கு சரிகாவை அழைத்துச் சென்று அவருக்கு மயக்க மாத்திரை கொடுத்து, பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர் தனது சகோதரர் உதவியுடன் சரிகாவின் உடலை கிராமத்திற்கு வெளியே சென்று வீசி விட்டாக அவர் கூறினார்.
ஸ்கூட்டி கேட்டதால்…
கல்லூரிக்கு சென்றுவர வசதியாக சரிகா ஸ்கூட்டி ஒன்றை வாங்கித் தரும்படி கேட்டதால் தான் ஆத்திரம் அடைந்து கொன்றதாக மன்டோஷ் கூறினார். மேலும் சரிகாவிக்கு இந்னொருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டதும் இந்த கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால் மன்டோசையும் அவரது சகோதரரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறு வருகிறது.