May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

அமைச்சரிடம் செல்போனை பறித்துச்சென்று ரூ.3500க்கு விற்ற வாலிபர்கள்

1 min read
Seithi Saral featured Image
The plaintiffs seized the cell phone from the minister and sold it for Rs3500

5.3.2020

புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன் கடந்த 2ம் தேதி கடற்கரை சாலையில் நடைபயிற்சி சென்ற போது அவரது செல்போனை 2 மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு ெசய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த செந்தில்(21), அனிதா நகரை சேர்ந்த பாலா(21) ஆகியோர் அமைச்சரின் செல்போனை பறித்து சென்றதும், இருவரும் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து உதவிய அவரது நண்பர்கள் 3 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கிடையில் கொள்ளை போன அமைச்சரின் செல்போனை, வில்லியனூரில் உள்ள கடையில் ரூ.3500க்கு கொள்ளையர்கள் விற்றது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், அமைச்சரின் செல்போனை பறிமுதல் செய்தனர்.

தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளிகளான செந்தில், பாலா ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.