பட கிளாமர் வேடத்துக்கு தூண்டில் போடும் தயாரிப்பாளர்கள் -மிரண்டுபோன அதுல்யா
1 min readகேப்மாரி படத்தின் மூலம் ஜெய்யுடன் ரொம்ப ரொம்ப நெருக்கமாக நடித்து இளசுகளை சூடு கிளப்பினார் அதுல்யா . இதனால் அவர்மேல் இருந்த பார்வை தற்போது தவறான நோக்கில் போய்க் கொண்டிருக்கிறதாம்.
இதற்கிடையில் கேப்மாரி படத்தை அடுத்து ஜெய்யுடன் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இனி இந்த பொண்ண விட்டா நமக்கு யாரும் கிடைக்கப் போவதில்லை என்று ஜெய் அதுல்யாவிற்கு பிராக்கெட் போட்டுள்ளாராம்.
ஏற்கனவே அஞ்சலி தன்னை நடுரோட்டில் விட்டதாக சிம்பதி ஒன்றை உருவாக்கி தற்போது அருள்வாக்கு ஜெய் பிராக்கெட் போட்டு உள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. இந்த படத்துடன் ஜெய் மற்றும் அதுல்யா திருமண ஜோடியாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாம்.
இது ஒருபுறமிருக்க மற்றொரு புறம் தெலுங்கு தயாரிப்பாளர்கள் பலர் படு கிளாமரான, கிட்டத்தட்ட ஷகிலா நடிக்கும் படங்களில் நடிப்பதற்கு அதல்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் அம்மணி மிரண்டு போய் உள்ளாராம், அதுல்யா நடிப்பதற்கு பல லட்சங்கள் உடனடியாகவே தருவதாக கூறி முற்றுகையிட்டுள்ளனர்.
இவர் நான், கிராமத்து பொண்ணு என்பதால் என்னோட சொந்தக்காரங்க அசிங்கமாக திட்டுவார்கள் என்று கூறியும் கேட்கவில்லையாம். ஆனாலும் அம்மணிக்கு பணத்தின் மேல் உள்ள ஆசை விடவில்லை. அப்பா, அம்மாவிடம் கேட்டு சொல்கிறேன் என்று அனுப்பி வைத்து விட்டாராம்.
அதுல்யாவின் நெருங்கிய தோழிகள், இனி நீ பெரிய ஹீரோக்களுடன் நடிக்கப்போவதில்லை, அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காசு சம்பாதிச்சு செட்டில் ஆகுற வழியை பாரு என்று தூண்டில் போட்டு வருகிறார்களாம்.