May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

ஏப்ரல் 2 முதல் கொரோனா நிவாரண உதவித் தொகை ரூ.1,000 – தமிழக அரசு அறிவிப்பு

1 min read
Corona Relief Assistance from April 2

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஏப்ரல் மாதத்துக்கு இலவசமாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளுக்கு மக்கள் வருவதை கட்டுப்படுத்த,  தெரு வாரியாக டோக்கன் வழங்கப்படும் என்றும், யார் யாருக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது ரேஷன் கடைகளில்  முன்கூட்டியே விளம்பரம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து இந்த பணிகள் தொடங்க உள்ளதுடன், ரொக்கப்பணம் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படும். வாகன வசதி உள்ள ஊர்களில் வீடு வீடாகச் சென்று தொகை வழங்கலாம் என்றும், அதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரிசையில் நிற்பவர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்கச் செய்ய வேண்டும் என்றும், முதியோர், மாற்றுத் திறனாளிகள் வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண உதவிகளை உரிய முறையில் விநியோகிக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட ஆட்சியாளர்களை சாரும் என்றும், சென்னையில் உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் இந்த பணியை மேற்கொள்வார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.