May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் மேலும் 6பேருக்கு கொரோனா பாதிப்பு

1 min read
Seithi Saral featured Image
6 more people affected by corona in TamilNadu

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா : மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29லிருந்து 35ஆக உயர்வு.

கர்நாடகாவில் கொரோனாவால் பாதித்த மேலும் ஒரு முதியவர் உயிரிழப்பு. மருத்துவருக்கு கொரோனா அறிகுறி அச்சத்தால் ஈரோடு ரயில்வே மருத்துவமனை மூடப்பட்டது.

கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்களது ஒரு நாள் ஊதியமான 33 கோடியே 81 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளனர்.

வெளிமாநிலங்கள் , வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 96,663 பேரை கண்டறிய வேண்டியுள்ளது.பிப்.15 முதல் கணக்கிட்டு கண்டறிய வேண்டுடியுள்ளது – பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன்.

அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்களிடம் காவல்துறை கடுமையாக நடந்து கொள்வதாக வழக்கறிஞர் எம்எல்.ரவி மனு.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க தாமரை கண்ணன்,சேஷாயி, சீமா அகர்வால் உள்ளிட்ட 6 ஏடிஜிபி அதிகாரிகள் நியமனம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ‘ஆப்ரேஷன் நமஸ்தே’ என்ற பெயரில் இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது : நாடுமுழுவதும் 8 இடங்களில் தனிமைப்படுத்துதல் மையங்களை ராணுவம் அமைத்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.