May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.10 லட்சம் மதுபாட்டில் திருட்டு

1 min read
Seithi Saral featured Image
Rs 1.10 lakh stolen from liquor shop

30.3.2020

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை சிங்காநல்லூர்-வெள்ளலூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை உள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஊழியர் ஒருவர் 29ம் தேதி பார்வையிட சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உள்ளே சென்று சோதனை செய்தனர். அப்போது விலை உயர்ந்த மது பாட்டில் உட்பட ரூ.1.10 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து போலீசார் மது பாட்டில்களை அள்ளிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, பூட்டப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.