தமிழ் நாட்டில் 72 பேருக்கு கொரோனா உறுதி
1 min read
Corona affirms 72 people in Tamil Nadu
25/4/2020
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரேனா
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா இந்தியாவையும் படாய் படுத்துகிறது. தமிழகத்திலும் இந்த நோய் பரவி வருகிறது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
நேற்று மட்டும் தமிழகத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 52 பேருக்கு நேற்று கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தம் 452 ஆக உயர்ந்து உள்ளது.
கோவையில் நேற்று 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 141ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் நேற்றுஜ பேருக்கு உறுதி செய்யப்பட்டு அங்கு 56 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர், ராமநாதபுரத்தில் தலா 2 பேருக்கும், காஞ்சிபுரம், சேலம், தென்காசி, விருதுநகர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது.தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்து உள்ளது.