பிரபல நடிகரின் பிடியிலிருந்து எஸ்கேப் ஆன நடிகை
1 min readவரவர பிரபல நடிகையின் சேட்டை தாங்க முடியவில்லை என அக்கட தேசத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள். அந்த அளவு மடமடவென வளர்ந்து வருகிறாராம். அதுமட்டுமில்லாமல் ஏகப்பட்ட சொத்துக்களையும் வளைத்துப் போட்டு விட்டாராம் இந்த நாயகி.
கன்னட சினிமாவை மையமாகக் கொண்டு ஹீரோயினாக களம் இறங்கிய அந்த எக்ஸ்பிரஷன் நாயகி தெலுங்கில் தற்போது முன்னணி நாயகி ரேஞ்சுக்கு வளர்ந்து விட்டார். அதுவும் பிரபல இளம் ஹீரோவுடன் இணைந்து நடித்த இரண்டு படமும் செம ஹிட் அடித்ததால் லக்கி ஹீரோயினாகவும் மாறி விட்டாராம்.
அதன் பிறகு அந்த நாயகிக்கு ஏறுமுகம்தான். ஆனால் அந்த ஹீரோவுக்கு படங்கள் பயங்கர அடி. என்ன ஏது என்று யோசிப்பதற்குள் நடிக்கும் அனைத்து படங்களும் தோல்வியை சந்தித்ததால் தற்போது அந்த நாயகனிடமிருந்து சற்று விலகியே இருக்கிறாராம் அந்த நாயகி.
எந்த பேட்டிகளுக்கு சென்றாலும் மேடைகளுக்கு சென்றாலும் அந்த ஹீரோவை பற்றி எதையாவது ஒன்று சொல்லிக் கொண்டே இருக்கும் அந்த நாயகி சமீப காலமாக அந்த ஹீரோவின் பேச்சை எடுத்தாலே வேறு ஏதாவது பேசலாம் என மழுப்பி விடுகிறாராம்.
ஏற்கனவே பெரிய ஹீரோயின் ஆகவேண்டும் என்பதற்காக பிரபல நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் வரை சென்றதை நிறுத்திவிட்டு தான் சினிமாவுக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்தார் அந்த நாயகி. அதன்பிறகு அந்த இளம் நடிகருடன் நடிக்கும் போதும் அம்மணிக்கும் அவருக்கும் சிறிது கசமுசா இருந்தது உண்மைதான்.
அம்மணியின் மார்க்கெட் ஏற ஏற ஹீரோவின் மார்க்கெட் சரிந்து விட்டது. அதுமட்டுமில்லாமல் எங்கு தட்டி யாரை பிடித்தால் பெரிய ஆளாக வர முடியும் என்பதை அக்கு வேறு ஆணிவேராக தெரிந்து வைத்திருக்கிறாராம்.
அதனால்தான் சமீப காலமாக அந்த நடிகரின் பேச்சை எடுப்பதில்லை.
மேற்கொண்டு நடிகருடன் பேச்சு வார்த்தையை கூட நிறுத்தி விட்டாராம். இனி அந்த ஹீரோ பெரிய அளவில் ஹிட் கொடுத்தால் மட்டுமே அம்மணியின் கை ஹாய் சொல்வதற்காக உயரும் என்கிறார்கள் சினிமா வட்டாரங்களில்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் சும்மாவா சொன்னாங்க என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது. ஏனென்றால் அந்த நாயகியின் அடுத்த குறி தமிழ் சினிமா தானாம்.