May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரியும் போலீசார் 4 பேருக்கு கொரோனா

1 min read
Seithi Saral featured Image


Corona for 4 cops whose working in Chennai DGP office

4-5-2020

சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த உளவுத் துறை nghyPrhh; உள்பட மொத்தம் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா

சென்னையில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரையும் அது விட்டு வைக்கவில்லை.
இந்த நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

டிஜிபி அலுவலகத்தில் உள்ள உளவுத்துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த கட்டுப்பாட்டு அறை காவலர்கள் 2 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதில் ஒருவர் மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர். இன்னொருவர் பெரவள்ளூரை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இவர்கள் 2 பேரும் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

ஏற்கனவே டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்த போலீசார் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து இவர்களையும் சேர்த்து மொத்தம் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.