கஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; பாதுகாப்பு படையினர் 5 பேர் வீர மரணம்
1 min readTerrorists attack Kashmir; Security forces killed 5 soldiers
3-5-2020
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 5 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். இதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகள் தாக்குதல்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தற்போது உலகம் முழுவதும் கொரோனா பீதி நிலவி வரும் காலத்திலும் அவர்கள் தங்கள் வன்மத்தை நிறைவேற்றி வருகிறார்கள்.
அவர்களை தேடும் வேட்டையும் தொடர்ந்து நடந்து வருகிறது. காஷ்மீரில் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
5 பேர் வீர மரணம்
இதில், பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென்று தாக்குதலில் ஈடுபட்டனர். அதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையாக துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல், மேஜர், இரண்டு வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீஸ் ஒருவர் என ஐந்து பேர் வீர மரணம் அடைந்தனர்.
பிரதமர் இரங்கல்
பாதுகாப்பு படையினர் வீர மரணம் அடைந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.