May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா

1 min read

Corona to 827 people in one day in Tamil Nadu

28-5-2020
தமிழகத்தில் ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

827 பேருக்கு கொரோனா

தமிழகத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் இறப்பும் வரத்தான் செய்கிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பற்றி இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் கூறியதாவது:-
தமிழகத்தில் இன்று( வியாழக்கிழமை) மேலும் 827 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 70 பேர் மராட்டிய மாநிலத்தில் இருந்தும், 20 பேர் கர்நாடகாவில் இருந்தும் வந்தவர்கள். இதனால் மொத்த பாதிப்பு 19,372 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 12 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 145 ஆக உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,548 ஆக உயர்ந்துள்ளது.

12,246 மாதிரிகள்

தற்போது 8,824 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 70 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 12,246 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இதுவரை 4,55,216 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 55.54 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை: சென்னையில் இன்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆனது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.