இந்தியா மீது பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் அபாண்ட குற்றச்சாட்டு
1 min readPakistani President Imran Khan accuses India
28-5-2020
இந்தியா மீது பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் அபாண்ட குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அட்டூழியம்
பாகிஸ்தான் ஏதாவது ஒரு வழியில் இந்தியா மீது வெறுப்புணர்ச்சியை காட்டி வருகிறது. பயங்கர வாதிகளை இந்தியாவுக்குள் ஊடுவச் செய்து நாச வேலைகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியா மீது பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் அபாண்டமான குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசின் விரிவாக்க கொள்கைகளில் அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. வங்காள தேசத்துடன் குடியுரிமை சட்டத்தின் வாயிலாகவும், சீனா மற்றும் நேபாளத்துடன் எல்லை மோதல்களாலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
பொய் குற்றச்சாட்டு
மேலும் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதாகவும் பாகிஸ்தான் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
காஷ்மீரை சட்ட விரோதமாக தன்னுடன் இணைத்துள்ளது இந்தியா செய்துள்ள போர்குற்றமாகும். நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கும் மட்டுமின்றி பிராந்திய அமைதிக்கும் இந்தியா அச்சுறுத்தலாக இருக்கிறது.
இவ்வாறு அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.