May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

சென்னைக்கு சமமாக பிற மாவட்டங்களில் கொரோனா பரவல்

1 min read
Today's Corona situation in Tamil Nadu

25-6-2020
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் மற்ற மாவட்டங்களில் மொத்த கொரோனா எண்ணிக்கையும் சமமாகி விட்டது.

கொரோனா

தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் சென்னையில் மட்டும்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. மற்ற மாவட்டங்களில் மிக குறைந்த அளவே கொரோனா பாதிப்பு இருந்தது.

சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களால் அங்கும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னையில் கொரோனா எண்ணிக்கையும் மற்ற மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கையும் கிட்டத்தட்ட சமமாகி விட்டது.
தமிழகத்தின் கொரோனா நிலவரம் பற்றி இன்று (வியாழக்கிழமை) மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு தகவல் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(வியாழக்கிழமை) மட்டும் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 151 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில்
இருந்து வந்தவர்கள் ஆவர். இதன் மூலம் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இருக்கும் 88 பரிசோதனை
மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 32,543 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இது
வரையில் தமிழகத்தில் 10,08,974 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.‘

45 பேர் சாவு

தமிழகத்தில் இன்று மட்டும் 45 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களில் அரசு ஆஸ்பத்திரிகளில் 29 பேரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 16 பேரும் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்துள்ளது. தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 30,064 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
சென்னை
தமிழகத்தில் இன்று 3,509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் மட்டும் 1,834 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 47,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 204 பேருக்கும், செங்கல்பட்டில் 191 பேருக்கும், வேலூரில் 172 பேருக்கும், திருவள்ளூரில் 170 பேருக்கும், ராமநாதபுரத்தில் 140 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

மாவட்ட வாரியாக…

இன்று கொரோனா பாதித்தவர்கள் விவரம் மாவட்ட வாரியாக வருமாறு:-
அரியலூர் 10
செங்கல்பட்டு 191
சென்னை 1834
கோவை 29
கடலூர் 18
தர்மபுரி 1
திண்டுக்கல் 15
ஈரோடு 5
கள்ளக்குறிச்சி 13
காஞ்சிபுரம் 98
கன்னியாகுமரி 47
கரூர் 3
மதுரை 203
நாகப்பட்டினம் 7
நாமக்கல் 1
நீலகிரி 2
பெரம்பலூர் 8
புதுக்கோட்டிடை1
ராமநாதபுரம் 140
ராணிப்பேட்டை 20
சேலம் 59
சிவகங்கை 25
தென்காசி 12
தஞ்சாவூர் 17
தேனி 68
திருப்பத்தூர் 15
திருவள்ளூர் 170
திருவண்ணாமலை 43
திருவாரூர் 5
தூத்துக்குடி 23
திருநெல்வேலி 11
திருப்பூர் 7
திருச்சி 27
வேலூர்168
விழுப்புரம் 34
விருதுநகர் 28









































































































About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.