தமிழகத்தில் இன்று 4280 பேருக்கு கொரோனா
1 min read4.7.2020
சென்னை: தமிழகத்தில் இன்று 4280 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா வேகம் எடுத்து வருகிறது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக 4000க்கும் பேருக்கு தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சம் பேருக்கும் அதிகமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1842 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து நிலைமை மோசமாகி வந்த நிலையில் இன்று கொஞ்சம் பாதிப்புகள் குறைவாக வந்துள்ளது. கடுமையான கட்டுப்பாடு இதற்கு காரணம் என்கிறார்கள். சென்னையில் மொத்தம் 66,538 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் மொத்தம் 2214 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.தமிழகத்தில் மொத்தமாக 60592 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வறுகிறது மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 44,956 ஆக உள்ளது. தமிழகத்தில் 65 பேர் இன்று கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 1450 பேர் பலியாகி உள்ளனர்.
சென்னைக்கு அடுத்து இன்று மதுரையில் 350 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 3776 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது .இன்று செங்கல்பட்டில் 215 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 6355 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று திருவள்ளூரில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 4596 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையை விட தற்போது மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.