கொரோனாவுக்கான சித்த மருந்துகளை சந்தேகிப்பது ஏன்? – ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
1 min readWhy suspect paranoia for corona? – High court Question
9-7-2020
சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் வழக்கில், சித்த மருத்துவர்களின் மருந்தை சந்தேகிப்பது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஐகோட்டில் வழக்கு
சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கொரோனாவுக்கு தன்னிடம் மருந்து இருப்பதாகவும் கொரோனா நோயாளிகளை குணமாக்கி தருகிறேன் என்றும் ஆனால் அரசு தன்னை தொடர்பு கொள்ள வில்லை என்றும் கூறினார். இதுபற்றி வலைதளத்தில் பல்வேறு பதிவுகளை போட்டுள்ளார்.
தொடர்ந்து இப்படி கூறி வந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைஎதிர்த்து திருத்தணிகாசலத்தின் தந்தை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்த மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும், சித்த மருந்துகளை கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அவைகள் வருமாறு:-
சந்தேகிப்பது ஏன்?
சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன. கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்ததாக கூறினால், அதனை சந்தேகிப்பது ஏன்? தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
நமது மருத்துவர்களுக்கு கட்டமைப்பு மற்றும் பண உதவி செய்து அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் கூறி உள்ளனர்? எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்தற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன?
எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன? அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளார்களா?
இவ்வாறு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
உத்தரவு
மேலும் இந்த வழக்கில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவு பிறப்பித்தனர்.