தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டியது; தூத்துக்குடி – 196 திருநெல்வேலி – 110
1 min readCoronal impact in Tamil Nadu has again exceeded 4 thousand; Thoothukudi - 196; Tirunelveli - 110
9-7-2020
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டியது. தூத்துக்குடி மாவட்டத்தில் 196 பேருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் 110 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பே தினமும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. ஆனால் சில நாட்களாக குறைந்து காணப்பட்டது.
இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மட்டுமு் தமிழகத்தல் 4,231 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது.
65 பேர் பலி
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 78,161 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவுக்கு இன்று 65 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,765 ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து…
தமிழகத்தில் இன்று கொரோனா கண்டறிப்பட்ட 4 ஆயிரத்து 231 பேரில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 4 ஆயிரத்து 86 பேர்.
விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 39 பேர், உள்நாட்டில் விமானத்தில் இருந்து வந்தவர்கள் 19 பேர். கடல் மார்க்கமாக வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்கள் 3 பேர். ரெயில் மூலமாக தமிழகம் வந்தவர்கள் 1 .
சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்களில் 83 பேர் .
மாவட்ட வாரியாக…
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு:- (வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களையும் சேர்த்து வெளியிடப்பட்டு உள்ளது)
அரியலூர் – 5
செங்கல்பட்டு – 169
சென்னை – 1,216
கோவை – 98
கடலூர் – 67
தர்மபுரி – 56
திண்டுக்கல் – 4
ஈரோடு – 17
கள்ளக்குறிச்சி – 254
காஞ்சிபுரம் – 67
கன்னியாகுமரி – 93
கரூர் – 4
கிருஷ்ணகிரி – 4
மதுரை – 262
நாகை – 25
நாமக்கல் – 17
நீலகிரி – 13
பெரம்பலூர் – 5
புதுக்கோட்டை – 46
ராமநாதபுரம் – 61
ராணிப்பேட்டை – 79
சேலம் – 92
சிவகங்கை – 62
தென்காசி – 29
தஞ்சாவூர் – 32
தேனி – 90
திருப்பத்தூர் – 19
திருவள்ளூர் – 364
திருவண்ணாமலை – 70
திருவாரூர் – 40
தூத்துக்குடி – 196
திருநெல்வேலி – 110
திருப்பூர் – 6
திருச்சி – 93
வேலூர் – 87
விழுப்புரம் – 31
விருதுநகர் – 289
விமானநிலைய தனிமைப்படுத்தல்
வெளிநாடு – 39
உள்நாடு – 19
ரெயில்நிலைய கண்காணிப்பு – 1
மொத்தம் – 4,231