May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

களக்காடு நகைக்கடை அதிபர் கொரோனாவுக்கு பலி

1 min read

10.7.2020

Corona kills kalakadu jeweler

நெல்லையில் கொரோனாவுக்கு நகைக் கடை அதிபர் பலியானார். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 4 வாரமாக மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் அதிகரிக்கிறது. இதேபோல் உயிரிழப்புகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. கடந்த 5 தினங்களுக்கு முன்னர் வரை நெல்லை மாவட்டத்தில் 9 பேர் மட்டுமே இறந்திருந்தனர். இன்றறை நிலவரப்படி 15 பேர் உயிரிழந்து விட்டனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நகை கடை அதிபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த 2 தினங்களாக மூச்சுதிணறல் இருந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். நேற்றிரவு வழக்கம்போல் அங்கு பணியாற்றும் நர்சுகளிடம் சிகிச்சை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவருக்கு திடீரென மூச்சுதிணறல் மேலும் அதிகரித்து உயிரிழந்தார். இதனால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நெல்லை மாவட்டத்தில் இவருடன் சேர்த்து கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலையை டாக்டர்கள், நர்சுகள் கண்காணித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.