May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 6,426 பேருக்கு கொரோனா; 5,927 பேர் டிஸ்சார்ஜ்

1 min read
Corona for 6,426 people in Tamil Nadu today; 5927 discharged

29-7-2020

தமிழகத்தில் இன்று 6,426 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இன்று மட்டும் 5,927 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நிலவரம் பற்றிய விவரத்தை தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிடும். அதன்படி இன்று ( புதன்கிழமை ) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று(புதன் கிழமை) மட்டும் 6,426 பேருக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்டு உள்ளது. இவர்களில் 6,393 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 33 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,34,114 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 119 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 60,794 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் 58 அரசு ஆய்வகங்களிலும் 61 தனிகார் ஆய்வகங்களிலும் பரிசோதனை நடந்தது. இதுவரை மொத்தம் 25 லட்சத்து 36 ஆயிரத்து 660 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

5,927 பேர் டிஸ்சார்ஜ்

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,892 பேர் ஆண்கள், 2,530 பேர் பெண்கள், 4 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,42,055 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 92,032 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது.
இன்று மட்டும் 5,927 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 883 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 82 பேர் இறந்தனர். இவர்களில் 54 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 28 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இதனால், தமிழகத்தில் கொரோனா வால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,741 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 57,493 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 11,697 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,93,304 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 29 ஆயிரத்து 113 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கவர்னர் மாளிகை

தமிழக கவர்னர் மாளிகையில் பணியாற்றிய 147 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 84 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கவர்னர் மாளிகையில் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து தூய்மைபடுத்தப்பட்டது.
இந்த நிலையில் கவர்னர் மாளிகையில் கொரோனா பரவியதால் கவர்னர் உதவியாளர் தாமஸ் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

ஆனாலும் கவர்னர் பன்வாரிலால் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கவர்னர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா உறுதியானதால், பன்வாரிலாலை 7 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுரை வழங்கினர். இதனையடுத்து அவர் தனிமைபடுத்தி கொண்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.