May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 5,864 பேருக்கு கொரோனா; நெல்லையில் 277 பேர் பாதிப்பு

1 min read

In Tamil nadu 5.864 person affected for corona inclouding 277 in nellai today

30-7-2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,864 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் 277 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

5,864 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறந்தபாடில்லை. கொரோனா நிலவரம் பற்றிய தகவலை தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் மட்டும் 5,864 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,811 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 53 பேர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,39,978 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 119 ஆய்வகங்கள் இன்று மட்டும் 61,202 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 25 லட்சத்து 97 ஆயிரத்து 862 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

டிஸ்சார்ஜ்

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,560 பேர் ஆண்கள், 2,304 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,45,615 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 94,336 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது.
இன்று மட்டும் 5,295 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 178 ஆக உள்ளது.

97 பேர் சாவு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் இன்று(வியாழக்கிழமை) மட்டும் கொரோனா பாதித்த 97 பேர் உயிரிழந்தனர். அதில் 65 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 32 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டவர்கள்.
இன்று இறந்தவர்களில் சென்னையில் 18 பேரும், திருநெல்வேலியில் 8 பேரும், தஞ்சாவூரில் 6 பேரும், தூத்துக்குடி, விருதுநகரில் தலா 5 பேரும், செங்கல்பட்டு, கோவை, கடலூர், தேனி, வேலூரில் தலா 4 பேரும், திண்டுக்கல், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சேலம், தென்காசி, திருவாரூரில் தலா 3 பேரும், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பூர், விழுப்புரத்தில் தலா 2 பேரும், அரியலூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டையில் தலா ஒருவரும் அடங்குவர்.

இவர்களையும் சேர்த்து, தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது.

டிஸ்சார்ஜ்

தற்போது 57,962 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 11,970 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,98,093 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 29 ஆயிரத்து 915 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று சென்னையில் 1,126 பேரும், செங்கல்பட்டில் 580 பேரும் டிஸ்சார்ஜ் ஆனார்கள்.
அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 443 பேரும், தூத்துக்குடியில் 370 பேரும், காஞ்சிபுரத்தில் 263 பேரும், கோவையில் 257 பேரும், மதுரையில் 226 பேரும், ராணிப்பேட்டையில் 212 பேரும், கன்னியாகுமரியில் 176 பேரும், வேலூரில் 174 பேரும், தேனியில் 162 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

நெல்லையில் 277 பேர்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 1,175 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 98,767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 354 பேருக்கும், திருவள்ளூரில் 325 பேருக்கும், கோவையில் 303 பேருக்கும், திருநெல்வேலியில் 277 பேருக்கும், ராணிப்பேட்டையில் 272 பேருக்கும், தேனியில் 261 பேருக்கும், கன்னியாகுமரியில் 248 பேருக்கும், விருதுநகரில் 244 பேருக்கும், மதுரை மற்றும் தூத்துக்குடியில் தலா 220 பேருக்கும் தென்காவியில் 56 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.