தமிழும் கப்பலோட்டிய தமிழரும் / கவிஞர் முருகேசன்
1 min read
Poem for V.O.C by Madurai P.Murugesan
5-9-2020
தித்திக்கும் செந்தமிழை ஆய்ந்தவராம்
திகட்டாத தீந்தமிழை வளர்த்தவராம்
தித்திக்கும் செம்மொழியாம் செந்தமிழில்
திகட்டாத இலக்கியங்கள் படைத்தவராம்
தித்திக்கும் செந்தமிழில் கவிதைகளாய்
தன் வாழ்க்கை வரலாற்றை வடித்தவராம்
எத்திக்கும் புகழ்பெற்ற ‘வள்ளியப்பன்’
‘உலகநாதன்’ சிதம்பரனார்
வாழ்க தமிழாய்
“சிறைச்சாலையில் செக்கிழுத்த துயர்தன்னை
சீக்கிரமே விரட்டியது என் செந்தமிழ்!
சிறைக்கோட்ட வேலை ஒழிந்த வேளைதன்னில்
தொல்காப்பியம் படித்துஎன்தொல் லைமறந்தேன்!
மறை நுலாம் வள்ளுவரின் குறள் படித்து
மகிழுடனே என்னுள்ளம் தழைத்தேன்!” என
நிறைவாக உயர்வாக தமிழ் மொழியை
போற்றியவராம் கப்பலோட்டிய நம்தமிழர்
-கவிஞர் பி.முருகேசன். மதுரை.