குற்றாலத்தின் குளு குளு அழகு (முல்லை குமார் என்ற தபசுகுமார்)
1 min readThe beauty of Courtallam (Mullai Kumar)
குற்றாலம்
குமாி பெண்
ம லையில் நழுவ விட்ட
வெண் பட்டு சேலை
வெள்ளி பூக்களை கோர்த்து தொங்க விட்ட வெள்ளை பூ மாலை
பனி மகள் நாணம் கொண்டு
ஓடும் நளினம்
பொங்கிய பால் சிந்தியதால் ஏற்பட்ட
அழகு
நல்ல பேச்சாளரின் நாவில் க ரைபுரண்டு
ஓடும் தமிழ்
நறுமணம் கமழும் மலா்களின் வெள்ளம்
ஐம் புலன்களுக்கும் இன்பம் தரும்
இல்லாளின் இனிய உள்ளம்
பாறையிலே உருண்டோடும்
பால் வண்ண முத்து
மலைகள்
நடுவே
ம றைந்திருக்கும்
இயற்கை அன்னையின் சொத்து
மூலிகைகள் கலந்து
முத்தமிழில் தரும் முத்த மழை
நயாகரா நீா் வீழ்ச்சியை மிஞ்சிய பேரழகு
நின்று நீராட ஏற்ற வழிகள் கொண்ட நீரழகு
உடலுக்கும் உள்ளத்துக்கும்
உற்சாகம் தரும்
அன்னையின் அரவணைப்பு
செந்தமிழ்பாடும்
இந்த
அருவி சொல்வதை கேளீரோ
எங்கும் தமிழ் முழங்க
எதிலும் தமிழ் வழங்க
ஏற்ற வழி செய்யுங்கள்
எந்நாளும் குற்றால அருவி பொங்க வழி காணுங்கள்
-முல்லை குமார் (தபசுகுமார்)