நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா நிலவரம்
1 min readCorona situation in Nellai, Tenkasi and Thoothukudi
27/9/2020
நெல்லை, தென்காசி , தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா நிலவரம் பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.
நெல்லை மாவட்டம்
நெல்லை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12350 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் 109 பேர் கொனோராவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 11264 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
தற்போது மொத்தம் 890 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவுக்கு இன்று பலி இல்லை. இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 196 ஆக உள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7137 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 103 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 6487 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 517 பேர் கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் இன்று ஒருவர் மட்டும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவரையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 42பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 69 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த மாவட்டத்தில் மொத்தம் 605 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 121 பேர் உயிரிழந்துள்ளனர்.