பாதாளத்துக்குள் சென்ற காவிரி
1 min readCauvery who went into the abyss
9-10-2020
சுவாமிமலை அருகே திருவலஞ்சுழி என்ற ஊர் உள்ளது. இங்கு சிவன் கோவில் உள்ள சிவபெருமானுக்கு கபர்தீசுவரர், செஞ்சடைநாதர் என்று பெயர். அம்பாள்&பெரியநாயகி. ஒரு காலத்தில் ஆதிசேடன் பூமியில் இருந்து வெளிப்பட்ட இடத்தில் பெரும் பள்ளம் உருவானது. அந்த பாதாளத்தில் காவிரி நதி சென்றுவிட்டது. இதனால் அந்த நாட்டை ஆண்ட சோழ மன்னன் கவலை அடைந்தான். அவனது கவலையை போக்க ஏரண்ட முனிவர் அந்த பாதாளத்தில் இறங்கினார். அதன்பின் அந்த காவிரி வலமாக சுழித்து வெளி வந்தது. இதனால் இந்த இடத்திற்கு திரு வலஞ்சுழி என்று பெயர் ஏற்பட்டது.