May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

2 min read
நவம்பர் - 2020 மாத ராசிபலன்கள்
 

                       மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் முக்கிய கிரகங்களில் சுக்கிரன் மட்டும் புதன் 4-ந் தேதி வரையும் 24-ந் தேதிக்கு பிறகும் நன்மை கொடுப்பார். மற்றய கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கி இருக்கவும்.
குரு 9-ம் இடத்தில் இருந்து எடுத்த காரியத்தில் பல்வேறு வெற்றிகளை தருவார். அவர் 15-ந் தேதி 10-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. முன்பு போல் அவரால் நல்ல பலன்களை அள்ளிதர முடியாது.பொதுவாக 10-ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பொருள் நஷ்டத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை மிக சிறப்பாக இருக்கிறது. அதன்மூலம் எந்த இடையூறையும் உடைத் தெறிந்து முன்னேற்றம் காணலாம்.
குடும்பம்: மாதத் தொடக்கத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். குடும்பத்தில் புதனால் இருந்து வந்த பிரச்சினை மறையும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு மறைந்து 24-ந் தேதிக்கு பிறகு ஒன்று சேருவர். விட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தாராளமாக கிடைக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.7,8-ந் தேதிகளில் உறவினாகள் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். ஆனால் 22,23,24-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 1,27,28-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்: பதவி உயர்வு காண்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.4-ந் தேதியில் இருந்து 24-ந் தேதி வரை பொறுமையும், விட்டுக் கொடுத்து போகவும். அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். 20,21-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும்.முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரம்: எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம். 15-ந் தேதிக்கு பிறகு அரசிடம் இருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்க வேண்டாம். அதே போல் வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.ஆனால் குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.11,12-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். 2,3,4,25,26,29,30-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம்.
கலைஞர்கள்:முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனையே காணலாம். பிரதிபலனை எதிர்பாராது உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள்:சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும். 24-ந் தேதிக்கு பிறகு அதிக வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஆசிரியர்களின் அறிவுரை உதவிகரமாக இருக்கும்.
விவசாயிகள் புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் மாத தொடக்கத்தை பயன்படுத்திக் கொள்ளவும். வேலைப்பாடு அதிகமாக இருந்தாலும் வருமானம் குறையாது. பாசிபயறு துவரை, கொண்டைக்கடலை , மஞ்சள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வகையில் நல்ல வருவாய் கிடைக்கும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள்: மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குழந்தை பாக்கியம் பெறலாம். குடும்பத்தில் 24-ந் தேதிக்குபிறகு உங்கள் தேவை அதிகரிக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.13,14,15 ஆகிய தேதிகள் குதூகலமான நாட்களாக அமையும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். 5,6-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.
உடல்நலம்: பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம்.அலைச்சல், அவப்பெயர் ,வயிறு தொடர்பான உபாதைகள் முதலியன 15-ந் தேதிக்கு பிறகு மறையும். 9,10,118,19,-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும்.சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.16,17-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கி இருக்கவும்.
அதிர்ஷ்டம்: 4,8 ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள் ஆகும். பச்சை அதிர்ஷ்ட நிறம். 1,5,6,11,12,13,14,15,20,21,22,23,24,27,28, ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமான நாட்கள் ஆகும்.
வழிபாடு: தினமும் காலையில் சூரிய வழிபடுங்கள். ஞாயிற்று கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். மேலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது துர்க்கை கோவிலுக்கு சென்று வாருங்கள்.

             ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! செவ்வாய் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். அதோடு புதன் 4-ந் தேதியில் இருந்து 24-ந் தேதி வரையிலும், சூரியன் 15-ந் தேதி வரையிலும்,சுக்கிரன்17-ந் தேதி வரையிலும் நற்பலனை கொடுப்பார்கள். வசதி வாய்ப்புகள் மேம்படும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும்.புதிய வீடு-மனை வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. 15-ந் தேதிக்கு பிறகு வீண்விவாதங்களை தவிர்க்கவும்.
குருவால் பொருளாதாரத்தில் திடீர்சரிவுகள் ஏற்பட்டிருக்கும். மனவேதனை அதிகமாக உங்களைவாட்டியிருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருந்திருக்க மாட்டார்கள். வீண்விரோதம் உருவாகியிருக்கலாம். இந்த நிலையில் 15-ந் தேதி குருபகவான் 9-ம் இடமான மகர ராசிக்கு செல்கிறார்.இது மிகச்சிறப்பான இடம். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.தேவைகள் பூர்த்திஆகும். உங்கள் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் படிபடியாக மறையும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. இவை அனைத்தும் குருவால் கிடைக்கும் நற்பலன்கள். இது தவிர குருவின் 9-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருக்கும். இதன் மூலமும் நற்பலன்கள் கிடைக்கும்.
குடும்பம்:பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். பக்தி உயர்வு மேம்படும். மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன் மனைவி இடையே அன்பு நீடித்தாலும் 24-ந் தேதிக்கு பிறகு கருத்து வேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். 9,10-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்பு உண்டு. எனவே அப்போது மட்டும் அதிக நெருக்கம் வேண்டாம். அதே நேரம் 25,26-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 2,3,4,29,30-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள்.
உத்தியோகம்: பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றத்தை காணலாம். முக்கிய கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றிக் கொள்ளவும். பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். 28-ந் தேதிக்கு பிறகு படிப்படியாக வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். 22,23,24-ந் தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வியாபாரிகள்: உழைப்புக்கு தகுந்த முன்னேற்றம் காண்பர். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. தடைகள் அகலும்.கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். 17-ந் தேதிக்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். 1,5,6,27,28-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். 13,14,15-ந் தேதிகளில் அதிக லாபம் கிடைக்கும்.
கலைஞர்கள்: தொடர்ந்து ஸ்திர தன்மையில் இருப்பர்.புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 17-ந் தேதிக்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காணகலாம். சமூகநல சேவகர்கள் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
விவசாயிகள்பாசி பயறு நெல், கோதுமை, எள், துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்: சிறப்பான நிலையில் இருப்பர். 4-ந் தேதிக்கு பிறகு சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 24-ந் தேதிக்கு பிறகு கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.16,17-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள். பொருளாதார வளம் மேம்படும். பெண்களால் நற்சுகம் ஏற்படும்.7,8-ந் தேதிகளில் பொன்,பொருள் வாங்கலாம்.
உடல் நலம்: 15-ந் தேதிக்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம்.11,12,20,21-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். 18,19-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை.வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்: 3,5 ம் அதிர்ஷ்டம் தரும் நிறங்கள். சிவப்பு,மஞ்சள் அனுகூலம் தரும் நிறங்கள்.2,3,4,7,8,13,14,15,16,17,22,23,24,25,26,29,30. ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: ஆஞ்சநேயரை வணங்கி வரவும்.சனிக்கிழமை பெருமாள் வழிபாடு நடத்துங்கள். 17-ந் தேதிக்கு பிறகு தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி பால்பாயாசம் வைத்து வணங்கலாம்.

                மிதுனம் 

மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன், கேது மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார்கள். மேலும் 15-ந் தேதிக்கு பிறகு சூரியனும், 28-ந் தேதிக்கு பிறகு புதனும் சாதகமான இடத்திற்கு வருகிறார்கள். இதனால் பின்தங்கிய பொருளாதார நிலை சீர்படும். வசதிகள் அதிகரிக்கும். தடைகள் படிப்படியாக விலகி காரிய அனுகூலம் எளிதாகும். மதிப்பு மரியாதை சிறப்படையும். பக்தி உயர்வு மேம்படும். பொருளாதார வளம் மேம்படும்.
குருவால் உங்கள் செல்வாக்கு உயர்ந்திருக்கும். நினைத்ததை நிறைவேற்றி இருப்பீர்கள்.பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். தேவைகள் பூர்த்தியாகி இருக்கும். பொருளாதார வளம் மேம்பட்டிருக்கும். வீடு மனை வாங்கி இருப்பீர்கள்.அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகுந்து இருப்பீர்கள். சிலர் வாகனம் வாங்கி இருக்கலாம்.இந்த நிலையில் 15-ந் தேதி குரு 8-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. குரு மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார்.பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண்விரோதத்தை உருவாக்குவார். பல்வேறு தொல்லைகளை கொடுப்பார். என்பது பொதுவான ஜோதிட வாக்கு. ஆனால் இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும்.
குடும்பம்: மதிப்பு மரியாதை அதிகரிக்கும். 17-ந் தேதிக்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும்.பக்தி உயர்வு மேம்படும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகள் கிடைக்கும். 24-ந் தேதிக்கு பிறகு எடுத்த காரியம் வெற்றி அடையும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். 5,6-ந் தேதிகளில் பெண்கள் உதவிகரமாக இருப்பர். 11,12-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் வீண் பகை வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். அதேநேரம் 1,27,28-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.செவ்வாயால் சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை.
உத்தியோகம்: வெளியூர் பயணம் ஏற்படலாம். 15-ந் தேதிக்கு பிறகு வளர்ச்சி காணலாம். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் நிறை வேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். 25,26-ந் தேதிகள் சிறப்பான காலமாக இருக்கும்.
வணிகம்: உங்கள் முயற்சிகயில் இருந்து வந்த தடைகள் மறையும். 3-ந் தேதிக்கு பிறகு தொழில் ரீதியாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். அலைச்சல் அதிகரிக்கும்.15-ந் தேதிக்கு பிறகு எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். இதனால் லாபம் அதிகரிக்கும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.2,3,4,7,8,29,30-ந் தேதிகளில் தடைகள் வரலாம். 16,17-ந் தேதிகளில் எதிர் பாராத வகையில் வருவாய் கிட்டும்.
பொதுநலம்: கலைஞர்களுக்கு மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.. பொதுநல சேவகர்கள் அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராது உழைக்க வேண்டியதிருக்கும். புகழ் பாராட்டுக்கு எந்த பங்கமும் வராது.
விவசாயம்: வருமானம் கிடைக்கும். பயறு வகைகளில் சிறப்பான மகசூலை தரும். 4-ந் தேதியில் இருந்து 23-ந் தேதி வரை கால் நடைவகையில் எதிர்பார்த்த வருவாயை காணமுடியாது. வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.
மாணவர்கள்: பொதுவாக முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆனால் இந்த மாதத்தை பொறுத்த வரை புதனால் 24-ந் தேதிக்குபிறகு சிறப்பான பலனை காணலாம். நற்பெயர் கிடைக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு கிடைக்க பெறலாம்.
பெண்கள்: குதூகலம் ஏற்படும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.17-ந் தேதிக்கு பிறகுகுடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 24-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். அண்டை வீட்டார் உதவிகரமாக இருப்பர். 9,10-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். 18,19-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
உடல்நலம்:உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம் 15-ந் தேதிக்கு பிறகு சிறப்பாக இருக்கும் மருத்துவச் செலவு குறையும். 13,14,15,22,23,24-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். சிலர் மன உழைச்சலுடன்காணப்படுவர்.20,21-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கி இருக்கவும்.
அதிர்ஷ்டம்: 7,9 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். சிவப்பு,15-ந் தேதிக்கு பிறகு செந்தூரம் நலம் தரும் நிறங்கள்.1,5,6,9,10,16,17,18,19,25,26,27,28. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். பார்வையற்றவர்களுக்க இயன்ற உதவி செய்யுங்கள்.செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம்.15-ந் தேதி வரை தினமும் காலையில் சூரியதரிசனம் செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கும், வியாழக்கிழமை சிவன் கோவிலுக்கு சென்று வர தவறாதீர்கள்.

               கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன்,சனி,ராகுமாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார்கள். மேலும் புதன் 4-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நன்மை தருவார். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். மற்ற கிரகங்கள் அனைத்தும் திருப்தியற்ற நிலையில்தான உள்ளன. எந்த கிரகத்தால் எந்த பிரச்சினை வந்தாலும் அதை சனி,ராகு முறியடித்து உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வார். பணப்புழக்கம் இருக்கும். செல்வாக்கு குறையாது. மதிப்பு மரியாதை சிறப்படையும். அவ்வப்போது சிற்சில தடைகளை சந்தித்தாலும் இறுதியில் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.
குருபகவான் இதுவரை மனநிம்மதியை இழக்க செய்திருப்பார். தடுமாறத்தை உண்டுபண்ணியிருப்பார். பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும். வீண்பகையும், விரோதமும் உருவாகியிருக்கும். இந்த நிலையில் 15-ந் தேதி குரு 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு செல்வது மிகவும் உயர்வான நிலை. மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்- களுக்கு உயர்வை தருவார்.
குடும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.வசதிகள் பெருகும். 24-ந் தேதிக்கு பிறகு சிற்சில விஷயங்களில் பொறுமையாகவும், விட்டுகொடுத்து போகவும்.2,3,4,29,30-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் 13,14,15-ந் தேதிகளில் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். 7,8-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் சிறப்பபான நிலையில் இருப்பர். தடைகள் அகன்று பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையுடன் நடந்து கொள்வர். கோரிக்கைகள் நிறைவேறும். 24-ந் தேதிக்கு பிறகு உத்தியோகத்தில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. 1,27,28-ந் தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வியாபாரிகள்: நல்ல பணப்புழக்கத்துடன் காணப்படுவர். புதிய வியாபாரம் அனுகூலத்தை தரும். அரசின் வகையில் இருந்து வந்த இடையூறுகள் 3-ந் தேதிக்கு பிறகு இருக்காது. பெண்கள் வகையில் இருந்த தொல்லைகள் 17-ந் தேதிக்கு பிறகு மறையும் ஆனால் அதன்பிறகு பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும்.24-ந் தேதிக்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். 18,19-ந் தேதிகளில் எதிர்பாராத வருவாய் கிடைக்கும். 5,6,9,10-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம்.
கலைஞர்கள்:புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று நல்ல வசதிகளையும் பெற்று வாழ்வீர்கள். நற்பெயர் கிடைக்கும். சமூகநல சேவகர்கள் நல்ல அந்தஸ்தில் இருப்பர். அரசியல்வாதிகளுக்கு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.
மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். 15-ந் தேதிக்கு பிறகு ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறலாம்.
விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் வருமானத்திற்கு குறை இருக்காது. குறிப்பாக நெல், பாசிபயறு,உளுந்து கொண்டைக்கடலை , மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும்.கால்நடை செல்வம் பெருகும். பசுவளர்ப்பிலும் போதிய வருவாயை பெறலாம். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள்: வாழ்க்கையில் ஆனந்தம் அதிகரிக்கும். 17-ந் தேதிக்கு பிறகு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். பெரியோர்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர் 11,12-ந் தேதிகளில் பொன், பொருட்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும்.20,21-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும்.
உடல்நலம்: உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. 16,17,25,26-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம். வயிறு பிரச்சினைவரும். 22,23,24-ந் தேதிகளில் வீண்விதங்களில் ஈடுபடாம் ஒதுங்கி இருக்கவும்.
அதிர்ஷ்டம்: 5,6 சிறப்பை தரும் எண்கள். பச்சை, வெள்ளைஆகியவை அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் ஆகும். 1,2,3,4,7,8,11,12,18,19,20,21,27,28,29,30.ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: முருகன் கோவிலுக்கு செல்ல தவறாதீர்கள். காக்கைக்கு அன்மிடுங்கள். தினமும் காலையில் சூரியனை வழிபட்டு வாருங்கள்.கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள் 23-ந் தேதிக்கு பிறகு புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.

                    சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் சாதகமாக நின்று பல்வேறு நன்மைகளை தருவார். மேலும் 15-ந் தேதி வரை சூரியனும் 23-ந் தேதிக்கு பிறகு புதனும் நன்மை தருவார்கள். மற்றய கிரகங்கள் அனைத்தும் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் பாதகம் இல்லை.எனவே காரிய அனுகூலம் ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.மதிப்பு மரியாதை சிறப்பாகும்.
குருவால் குடும்பம் மேம்பட்டிருக்கலாம். நல்ல பணப்புழக்கத்தை தந்திருப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைத்திருப்பார். பிள்ளைகளால் பெருமை கிடைத்திருக்கும். பெண்களால் எண்ணற்ற முன்னேற்றத்தை அடைந்திருப்பீர்கள். இந்த நிலையில் 15-ந் தேதி குரு உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. 6-ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப்புக்குள்ளக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார் என்பது ஜோதிடவாக்கு. ஆனாலும் அதற்காக கவலை கொள்ளவேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வை மிகவும் சாதகமாக காணப்படுகிறது. குருவின் பார்வை மூலம் எந்த இடையூறுகளையும் தடுத்து நிறுத்தலாம்.
குடும்பம்: மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. 9,10-ந் தேதிகளில் பெண்களால் மிகுந்த பலனை எதிர்பார்க்கலாம். 17-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 5,6-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்ஆனால் 16,17-ந் தேதிகளில் உறவினாகள் வகையில் மனக்கசப்பு வரலாம்.அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம்
உத்தியோகம்: சீரான வளர்ச்சி காண்பர். முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும்.புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர்,செல்வாக்குக்கு பாதிப்பு,வீண் மனக்கவலை முதலியன 3-ந் தேதிக்கு பிறகு மறையும். மாத பிற்பகுதியில் அரசு ஊழியர்கள் பிரச்சினையில் இருந்து விடுபடுவர். 2,3,4,29,30-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வியாபாரிகள்: வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.அதிக லாபம் கிடைக்க பெறுவர். கூட்டாளிகளிடையே ஒற்றுமை நீடிக்கும். புதிய தொழில் வெற்றியை தரும். 15-ந் தேதிக்கு பிறகு பெண்களிடம் விரோதம் ஏற்படும். அரசு வகையில் இருந்த பிரச்சினை 24-ந் தேதிக்கு பிறகு மறையும். அது வரை வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.அதன்பிறகு அரசிடம் எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறும். 7,8,11,12-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிற தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும். 20,21-ந் தேதிகளில் எதிர் பாராதவகையில் லாபம் கிடைக்க பெறுவர்.
கலைஞர்கள்: நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.புகழ் பாராட்டு கிடைக்கும். புதிய ஒபப்பந்தம் வரும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது.
மாணவர்கள்: ஒரளவு முன்னேற்றம் காண்பர். பின்தங்கிய நிலை இருக்காது. ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். அதிக சிரத்தை எடுத்து படித்தால் சிறப்பு நிலையை அடையலாம்.
விவசாயிகள்வருவாய்க்கு குறை இருக்காது. பாசி பயறு நெல், எள், உளுந்து, சோளம், பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். 24-ந் தேதிக்கு பிறகு கால் நடை செல்வம் பெருகும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள்: பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். 13,14,15-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். 22,23,24-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள். பொருளாதார வளம் மேம்படும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். 23-ந் தேதிக்கு பிறகு பல்வேறு முன்னேற்றங்களை காணலாம்.பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும்,ஆனந்தமும் அதிகரிக்கும். சகோதரிகள் மிக உறுதுணையாக இருப்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும் சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை காணலாம்.
உடல் நலம்: பித்தம் உஷ்ணம், சளி தொடர்பான உபாதைகள் வரலாம்.18,19,27,28-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம். வயிறு பிரச்சினைவரும். 25,26-ந் தேதிகளில் வீண்விதங்களில் ஈடுபடாம் ஒதுங்கி இருக்கவும்.
அதிர்ஷ்டம்: 7,9 அதிர்ஷடம் தரும் எண்கள்.வெள்ளை, செந்தூரம் யோகம் தரும் நிறங்கள் 2,3,4,5,6,9,10,13,14,15,20,21,22,23,24,29,30. ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: தினமும் முருகனை தரிசனம் செய்து ஏழைகளுக்கு மொச்சை தானம் செய்யுங்கள். குலதெய்வத்தை வணங்க மறந்து விடாதீர்கள்.துர்க்கை வழிபாடு உங்கள் மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் பார்வை யற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள்

               கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் 16-ந் தேதி சூரியன் சாதகமான இடத்திற்கு வருகிறார். மேலும் மாதம் முழுவதும் சுக்கிரன்,கேது நன்மை தருவார்கள். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். காரியம் அனுகூலம் அடையும். பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. மதிப்பு மரியாதை சிறப்படையும். அவப்பெயர் மறையும்.
குரு 4-ம் இடத்தில் இருந்து பல்வேறு இன்னலை தந்திருப்பார். அவர் குடும்பத்தில் பல பிரச்சினைகளை உருவாக்கி இருப்பார்.உறவினர்களிடையே வீண்விரோதம் வந்திருக்கும். கணவன்-மனைவி இடையே பிணக்குகள் ஏற்பட்டு இருக்கும்.தூரத்து உறவினர் வகையில் விரும்பதகாத சம்பவங்களும் நடந்து இருக்கலாம். இந்தநிலையில் 15-ந் தேதி குரு உங்கள் ராசிக்கு 5-ம் இடத்துக்கு செல்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்திவைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் அவரது 5,7-ம் இடத்துப்பார்வைகள் சாதகமாக அமையும். இதனால் மேலும் நன்மைகள் அதிகரிக்கும்.
குடும்பம்: கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். 15-ந் தேதிக்கு பிறகு உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். பெண்களால் முன்னேற்றமான சம்பவம் நடக்கும். குறிப்பாக 11,12-ந் தேதிகளில் அவர்கள் உதவி அதிகம் கிடைக்கும். 16,17-ந் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் கிடைக்கப்பெறலாம்.7,8-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால்18,19-ந் தேதிகளில் அவர்கள் வகையில் பிணக்குகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். 3-ந் தேதிக்கு பிறகு சிற்சில விஷயங்களில் பொறுமையாகவும், விட்டுகொடுத்து போகவும்.
உத்தியோகம்: சீரான நிலையில் காணப்படுவர். சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். வேலைப்பளு இருக்கும். சற்று முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும்.இடமாற்ற பீதி மறையும். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்குக்கு பாதிப்பு,வீண் மனக்கவலை முதலியன 23-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். 5,6-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம்.
வணிகம்: முன்னேற்றம் காணலாம். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.16-ந் தேதிக்கு பிறகு வீண்விரயம் இருக்காது. பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பா இருக்கும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.எதிரிகளின் இடையூறுகள் அவ்வப்போது வந்தாலும் அதனால் பாதிப்புகள் இருக்காது.22,23,24-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.9,10,13,14,15-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம். 23-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
கலைஞர்கள்: சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிறப்பான வருமானம் இருக்கும். சமூக நல சேவகர்கள் நற்புகழை பெறுவர்.அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல் வாதிகள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது.
மாணவர்கள்-அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும்.ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.15-ந் தேதிக்கு பிறகு கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள்:உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை கிடைக்க பெறலாம். பசு வளர்ப்பவர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.
பெண்கள்: சிறப்பான பலனை காணலாம்.குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.3-ந் தேதிக்கு பிறகு சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம்.சற்று ஒதுங்கி இருக்கவும் வேலைக்கு செல்லும் பெண்கள்உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அனுசரித்து போவது நல்லது குரு சாதமாக இருப்பதால் பிற்போக்கான நிலை ஏற்படாது. நற்பலன் கிடைக்க பெறுவர். 25,26-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக இருக்கும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள். பணம் கிடைக்கும்.
உடல்நலம்: சிறப்பாக இருக்கும்.16-ந் தேதிக்கு பிறகு கண் தொடர்பான நோய் குணமாகும்.2,3,4,20,21,29,30-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.வயிறு தொடர்பான உபாதை வரலாம்.1,27,28-ந் தேதிகளில் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டவும்.
அதிர்ஷ்டம்: 5,8 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை,15-ந் தேதிக்கு பிறகு செந்தூரம் ஆகியவை அதிர்ஷ்ட நிறங்களாகும்.5,6,7,8,11,12,16,17,22,23,24, 25,26. ஆகிய தேதிகள் சிறப்பான நாட்கள்.
வழிபாடு: சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபட்டலாம். முடிந்தால் ஊனமுற்ற ஏழைகளுக்கு இயன்ற உதவியை செய்யுங்கள். புதன்கிழமை குலதெய்வத்தை வணங்குங்கள். ஏழைகளுக்கு பாசி பயறு தானம் செய்யலாம். 15-ந் தேதி வரை தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள்.

              துலாம்

துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் செவ்வாய், சனி ஆகியோர் தொடர்ந்து நற்பலனை கொடுப்பார்கள். சுக்கிரன்17-ந் தேதி சாதகமான இடத்துக்கு மாறுகிறார். உங்கள் முயற்சியில் இருந்த தடைகள் அனைத்தும் 17-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும். காரிய அனுகூலம் எளிதாகும்.
குருவால் உங்கள் முயற்சியில் அவ்வப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கும். சிலர் வேலையை இழக்கும் நிலைகூட ஏற்பட்டு இருக்கலாம். இந்த நிலையில் 15-ந் தேதி குரு 4-ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இந்த இடமும் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியாது. பொதுவாக குருபகவான் 4-ல் இருக்கும் போது மனஉளச்சலையும், உறவினர்வகையில் வீண்பகையையும் உருவாக்குவார்
குடும்பம்: செவ்வாயால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.மகிழ்ச்சி அதிகரிக்கும். 3-ந் தேதிக்கு பிறகு வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். அக்கம் பக்கத்தினர் வகையில் மனக்கிலேசம் வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம். பிள்ளைகள் வகையில் இருந்து வந்த பிரச்சினை 24-ந் தேதிக்கு பிறகு மறையும். 13,14,15-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் உதவிகரமாக இருப்பர். 9,10-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் ஒற்றுமை மேம்படும். அவர்களால் முன்னேற்றம் காணலாம். அதேநேரம் 20,21-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்: பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். வேலைப்பளு குறையும். கோரிக்கைகள் நிறைவேறும்.தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் 3-ந் தேதிக்கு பிறகு இடமாற்றத்தை காணலாம்.இதனால் சிலர் குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிய வேண்டிய திருக்கும்.செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். 24-ந் தேதிக்கு பிறகு மதிப்பு மரியாதை சுமாராக இருக்கும். வீண்விவாதங்களை தவிர்க்கவும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும்.7,8-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வணிகம்: வியாபாரம் செய்வோர் முன்னேற்றம் காண்பர். லாபம் அதிகம் கிடைக்கும். பகைவர்கள் வகையில் இருந்து வந்த பிரச்சினைகள் 15-ந் தேதிக்கு பிறகு மறையும். ஆனால் அதன்பின் வீண்விரயம் ஏற்படும். 11,12,16,17-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். 25,26-ந் தேதிகளில் எதிர்பராத வருவாய் கிடைக்கும்.
பொதுநலம்: கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் 17-ந் தேதிக்கு பிறகு மறையும்.அதன்பிறகு சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொது தொண்டில் இருப்பவர்கள் மதிப்பு, மரியாதை கிடைக்கப்பெறுவர்.சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.
மாணவர்கள்: முன்னேற்றம் காண்பர். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அசட்டையாக இருந்து விட வேண்டாம்.
விவசாயம்: உழைப்புக்கு தகுந்த வருவாய் கிடைக்கத் தொடங்கும். நெல், கரும்பு, எள், கிழங்கு வகைகளில் நல்ல மகசூலை காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு
பெண்கள்: மகிழ்ச்சி அதிகரிக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும் .23-ந் தேதிக்கு பிறகு பிள்ளைகள் நடத்தையில் சற்று அக்கறை காட்ட வேண்டிய திருக்கும்.1,27,28-ந் தேதிகளில் சகோதரிகளால் பொன், பொருள் கிடைக்கும். 18,19-ந் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து உதவி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
உடல்நலம்: அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.17-ந் தேதிக்கு பிறகு கண் தொடர்பான சிறுசிறு உபாதைகள் வரலாம். 5,6-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.22,23,24-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம். 2,3,4,29,30-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 2,6 ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள். கறுப்பு சிவப்பு ஆகிய நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்கள் ஆகும். 1,7,8,9,10,13,14,15,18,19,25,26,27,28 ஆகிய தேதிகள் அதிர்ஷ்ட நாட்கள் ஆகும்.
வழிபாடு: ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.நாக தேவதையை வணங்கி வாருங்கள்.புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். தினமும் காலைமாலையில் சூரிய வழிபாடு நடத்துங்கள். இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் அகலும்.

          விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் புதன்4-ந் தேதி வரையும், குரு 14-ந் தேதி வரையும், சுக்கிரன் 17-ந் தேதி வரையும் சாதகமாக காணப்படுகிறார்கள். மற்ற கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருப்பதால் சிற்சில விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும்.24-ந் தேதிக்கு பிறகு வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
குருவால் உங்களை எதிர்த்தவர்கள் சரண் அடையும் நிலை ஏற்பட்டு இருக்கும். பகைவர்களின் சதி தவிடுபொடி ஆகிஇருக்கும். மனதில் துணிச்சல் பிறந்து உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருந்து இருக்கும். வணிகம் நல்ல லாபத்தைக் கொடுத்து இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மனநிம்மதியோடு பணியாற்றி இருப்பீர்கள்.சிலர் புதிய பதவி பெற்று இருப்பர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடி இருக்கும். வீடு,மனை வாங்கி இருக்கலாம். 15-ந் தேதி குருபகவான் 3-ம் இடமான மகர ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக குரு 3-ம் இடத்தில் இருக்கும் போது முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவிஉயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். அப்படியானால் குருவால் பிற்போக்கான பலன்கள்தான் நடக்குமோ என்று அஞ்ச வேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. குருவின் பார்வைக்கும் கோடிநன்மை உண்டு. எந்த இடையூறையும் அவரது பார்வை உடைத்து எறியும்.
குடும்பம்: மாதத் தொடக்கத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் எடுத்த காரியம் வெற்றி அடையும். பண வரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். கணவன்-மனைவி இடையே சந்தோஷமும் ஆனந்தமும் இருக்கும். சகோதரிகள் மிகவும் உறுதுணையாக இருப்பர். குறிப்பாக 16,17-ந் தேதிகளில் அவர்களால் முன்னேற்றமான சம்பவங்கள் நடக்கும்.11,12-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 22,23,24-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.24-ந் தேதிக்கு பிறகு வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம்.
உத்தியோகம்: கோரிக்கைகள் நிறைவேறும்.சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். 15-ந் தேதிக்கு பிறகு வேலைப்பளு அதிகரிக்கும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அனுசரித்து போவது நல்லது. 24-ந் தேதிக்கு பிறகு சிலர் இடமாற்றம் காணலாம். 9,10-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரிகள்: தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 15-ந் தேதிக்கு பிறகு நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறுகள் வரலாம். எனவே அவர்கள் பக்கம் ஒரு கண் இருப்பது நல்லது. 13,14,15,18,19ஆகிய தேதிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். 1,27,28-ந் தேதிகளில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் பெற்று புகழ், பாராட்டு கிடைக்க பெறுவர். சிலர் உயர்ந்த அந்தஸ்தை பெறலாம். 17-ந் தேதிக்கு பிறகு காரியத்தடை. பொருள் நஷ்டம் ஏற்படலாம் அரசியல்வாதிகள் சுமாரான நிலையிலேயே இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் கிடைக்கும்.
மாணவர்கள்:கல்வியில் சிறப்படையலாம்.15-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.ஆசிரியர்களின் ஆலோசனையையும் அறிவுரையையும் கேட்டு பெறவும்.
விவசாயிகள் சீரான பலனை எதிர்நோக்கலாம். பயறு வகைகளில் நல்ல வருமானம் இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேற கால தாமதம் ஆகலாம்.
பெண்கள்: சிறப்பான நிலையில் இருப்பர். தேவைகள் பூர்த்தியாகும். கணவரின் அன்பு கிடைக்கும். 20,21-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள். 2,3,4,29,30-ந் தேதிகள் சிறப்பானதாக அமையும்.சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும்.24-ந் தேதிக்கு பிறகு எந்த ஒரு முக்கிய காரியத்தையும் தீர சிந்தித்த பிறகே தொடங்க வேண்டும் பிள்ûள்கள் வகையில் எதிர்பார்த்த பயன் கிடைக்காது.
உடல் நலன்: செவ்வாயால் உடல் நலம் லேசாக பாதிக்கப்படும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. 15-ந் தேதிக்கு பிறகு அலைச்சலும் சோர்வும் ஏற்படும். 5,6-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டவும். பண விஷயத்தில் கவனம் தேவை. 7,8,25,26-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர். வயிறு தொடர்பான உபாதை வரலாம்
அதிர்ஷ்டம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் ஆகும். 5,7 யோகம் தரும் எண்கள். 1,2,3,4,9,10,11,12,16,17,20,21,27,28,29,30. ஆகிய தேதிகள் அனுகூலத்தை தரும் நாட்கள் ஆகும்.
வழிபாடு: பெருமாள் கோவிலுக்கும், சிவன் கோவிலுக்கும் சென்று வாருங்கள். சூரியனையும் வழிபட தவறாதீர்கள். முருகன் கோவிலுக்கு சென்று துவரை தானம் செய்தால் உடல் நலம் சிறப்படையும்.ராகுவுக்கு உளுந்து படைத்து மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

                தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் சூரியன் 15-ந் தேதி வரையிலும், புதன் 24-ந் தேதி வரையிலும்,குரு17-ந் தேதிக்கு பிறகும்,சுக்கிரன்17-ந் தேதிக்கு பிறகும் நன்மை கொடுப்பார்கள்.மேலும் ராகு மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. மதிப்பு, மரியாதை இருக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.
குருவால் குடும்பத்தில் குழப்பமும், பிரச்சினைகளும் வந்திருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் ஏதேனும் ஒரு பிரச்சினையை சந்தித்து கொண்டே இருந்திருப்பர். இந்த நிலையில் 15-ந் தேதி குருபகவான் 2-ம் இடமான மகர ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான அம்சம். இதுவரை குருவால் ஏற்பட்டு வந்த இடர்பாடுகள் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம் .பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
குடும்பம்: பெண்களின் ஆதரவு உண்டு. பெண்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு கூடும். 17-ந் தேதிக்கு பிறகு பண வரவு கூடும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். 13,14,15-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதேநேரம் 25,26-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். 18,19-ந் தேதிகளில் பெண்கள் மூலம் முன்னேற்றம் காணலாம். 22,23,24-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் கிடைக்கலாம்.
உத்தியோகம்:அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும். தனியார் துறையில் இருப்பவர்களுக்கு அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க தடைஏதும் இல்லை. 11,12-ந் தேதிகளில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். 15-ந் தேதிக்கு பிறகு இடமாற்றம்வர வாய்ப்பு உண்டு. அதிகமாக போராடியே கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்.
வியாபாரம்: வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த இடர்பாடுகள் தடைகள்17-ந் தேதிக்கு பிறகு மறையும்.தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 24-ந் தேதிக்குபிறகு யாரிடமும் பார்த்து பழகவும்.அலைச்சல் இருக்கும். 16,17,20,21-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம்.2,3,4,29,30-ந் தேதிகளில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
கலைஞர்கள்: எதிரிகள் வகையில் இருந்து வந்த தொல்லைகள், அவப்பெயர் , போட்டிகள் முதலியன 17-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறலாம்.புகழ் பாராட்டு கிடைக்க பெறலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
மாணவர்கள்:முன்னேற்ற நிலையில் காணப்படுவர். மாதபிற்பகுதியில் ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள்: உழைப்புக்கேற்ற வருமானத்தை பெறலாம். நெல், சோளம், கேழ்வரகு, பாசிபயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, மஞ்சள் போன்ற பயிர்களில் நல்ல வருவாய் கிடைக்கும். கால்நடை செல்வம் பெருகும். பசுவளர்ப்பில் போதிய வருவாயை பெறலாம். பால்பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்.
பெண்கள்: உங்களால் குடும்பம் சிறப்படையும். கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் நன்மதிப்பு பெறுவர். 15-ந் தேதிக்கு பிறகு உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.5,6 ஆகிய தேதிகளில் உன்னத பலனை காணலாம்.சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்கள் மூலம் பண உதவி கிடைக்கும். 22,23,24-ந் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம்.
உடல்நலம்: செவ்வாயால்தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம். வயிறு பிரச்சினைவரும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.7,8-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டவும் 9,10-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். மனக்குழப்பம் ஏற்படலாம்.
அதிர்ஷ்டம்: அதிர்ஷ்ட எண்கள்6,7 ஆகியவை ஆகும். பச்சை, கறுப்பு ,நீலம் 15-ந் தேதி வரை செந்தூரம், ஆகியவை அதிர்ஷ்ட நிறங்களாகும்.2,3,4,5,6,11,12,13, 14,15,18,19,22,23,24,29,30. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: முருகன் கோவிலுக்கு சென்று, ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள்15- ந் தேதிக்கு பிறகு தினமும் சூரிய தரிசனம் செய்யுங்கள். 24-ந் தேதிக்குபிறகு புதன் பகவானுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு பாசி பயறு தானம் செய்யலாம். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்..

                    மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் சூரியன்,செவ்வாய், கேது ஆகிய கிரகங்கள் சாதகமாக காணப்படுகின்றன. சுக்கிரன்17-ந் தேதி வரையும், புதன் 3-ந் தேதிக்கு பிறகும் நன்மைகள் தருவார்கள். கடவுனிள் கருணை உங்களுக்கு கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். தேவையான பொருட்கள் கிடைக்கும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.15-ந் தேதிக்கு பிறகு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.
குரு பல்வேறு இடையூறுகளை கொடுத்து இருப்பார். பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு இருக்கும்.சிலரது வாழ்க்கையில் துக்ககரமான சம்பவமும் நிகழ்ந்து இருக்கலாம். 15- ந் தேதி குரு பகவான் உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைத்துள்ளார். இதுவும் அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. கலகம் விரோதம் வரும் என்றும் மந்தநிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு. ஆனாலும் கவலைபட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது.
குடும்பம்: பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். அவர்களால் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும்.நகைகள் வாங்க வாய்ப்பு கூடி வரும். 20,21-ந் தேதிகளில் சகோதரிகளால் பண உதவி கிடைக்கும் 16,17-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 1,27,28-ந் தேதிகளில் அவர்கள் வகையில் வீண் விரோதம் வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம் போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு 3-ந் தேதிக்கு பிறகு மேல் அதிகாரிகளின்ஆதரவு இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 15-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். 13,14,15-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வியாபாரம்: நல்ல முன்னேற்றம் காணலாம். புதிய தொழில் வளர்ச்சி அடையும். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து 3-ந் தேதிக்கு பிறகு விடுபடுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். 15-ந் தேதிக்கு பிறகு அரசின் உதவி கிட்டும்.வங்கி கடன் எளிதாக கிடைக்கும். சந்திரனால் 18,19,22,23,24-ந் தேதிகளில் சிறு தடைகள் வரலாம். 5,6-ந் தேதிகளில் எதிர்பாராத பணவரவு இருக்கும். 24-ந் தேதிக்கு பிறகு தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
கலைஞர்கள்: வருமானத்திற்கு குறை இருக்காது. 17-ந் தேதிக்கு பிறகு எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். .போட்டிகள் அதிகம் இருக்கும். அவப்பெயர் உருவாகலாம். எதிர் பார்த்த புகழ் பாராட்டு கிடைப்பது அரிது. அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் முன்னேற்றமான பலனை காணலாம். எதிர்பார்த்த பதவி கிடைக்க பெறுவர்.
மாணவர்கள்: புதனால் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகள்: வருமானம் அதிகரிக்கும். நெல்,பாசி பயறு உளுந்து மற்றும் கிழங்கு வகைகள் போன்ற பயிர்கள் சிறப்பை தரும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கலாம்.பால்பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள்: மகிழ்ச்சியுன் காணப்படுவர். குடும்பத்தில் உங்கள் தேவை அதிகரிக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். குருவின் பார்வையால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும் .பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 7,8 ஆகிய தேதிகளில் உன்னத பலனை காணலாம். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்கள் மூலம் பண உதவி கிடைக்கும். 25,26-ந் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம்.
உடல்நலம்: உடல் உபாதைகள் பூரண குணம் அடையும்.11,12-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். 9,10-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்: அதிர்ஷ்ட எண்கள் 1,7 ஆகியவை ஆகும். பச்சை, செந்தூரம் ஆகியவை அதிர்ஷ்ட நிறங்கள் ஆகும். 5,6,7,8,13,14,15,16,17,20,21,25,26. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: விநாயகர் துதியும் ஆஞ்சநேயர் வழிபாடும் உங்களுக்கு பயன் உள்ளதாக அமையும். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள் வியாழக்கிழமை தெட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். முருகன் வழிபாடு உங்கள் வளத்தை அதிகரிக்கும்.திருச்செந்தூர் முருகனையும் வழிபடலாம்.. நாக தேவதையை வணங்கி வாருங்கள்.

             கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் புதன்3-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் கவலைவேண்டாம். 16-ந் தேதி சூரியன் சாதகமான இடத்திற்கு வருகிறார். மேலும் மாதம் முழுவதும் சுக்கிரன்,சனி நன்மை தருவார்கள். பண வரவு இருக்கும். 15-ந் தேதிக்கு பிறகு உங்கள் மீதான பொல்லாப்பு மறையும்.
குரு இதுவரை 11-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்திருப்பார். குறிப்பாக புதியபதவியும், சம்பளஉயர்வும் கிடைத்திருக்கும். வேலையில் திருப்தி கண்டிருப்பீர்கள். வியாபாரம் சிறப்பாக இருந்திருக்கும். பணப்புழக்கம் மேம்பட்டிருக்கும். எடுத்த காரியத்தை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடிந்திருப்பீர்கள். இப்படி பல்வேறு நன்மைகளை தந்த குருபகவான்15- ந் தேதி உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு வருகிறார். இது சுமாரான நிலையே. இங்கு அவரால் பொருள் விரயம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் வருத்தம் உருவாகும். வீண்அலைச்சல் ஏற்படும்
குடும்பம்:வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும்.உங்கள் முயற்சி களில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். 3-ந் தேதியில் இருந்து 24-ந் தேதி வரை மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையும், விட்டுக் கொடுத்து போகவும்.அதன்பிறகு பெண்களின் ஆதரவு இருக்கும். பெண்களால் பொருள் சேரும். சகோதரிகள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.குறிப்பாக22,23,24-ந் தேதிகளில் அவர்களால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். 18,19-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 2,3,4,29,30-ந் தேதிகளில் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்: சக பெண்ஊழியர்கள்மிகவும் ஆதரவுடன் இருப்பர். 3-ந் தேதியில் இருந்து 24-ந் தேதி வரை வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.அதன்பிறகு வேலைப்பளு குறையும். சிலர் பதவி உயர்வு கிடைக்க பெறுவர். செல்வாக்கு, அந்தஸ்து கிடைக்கும். 16,17-ந் தேதிகளில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வணிகம்:தங்கம்,வெள்ளி,வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். வியாபாரத்தை பெருக்கி கொள்ளலாம். புதிய வியாபாரம் அனுகூலம் அடையும். லாபம் அதிகரிக்கும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து 24-ந் தேதிக்கு பிறகு விடுபடுவர். செவ்வாயால் அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். 20,21,25,26-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம்.7,8-ந் தேதிகளில் எதிர்பாராத வருவாய் கிடைக்கும்.
பொதுநலம்: பின்தங்கிய நிலை மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ் பாராட்டுக்கு தடை ஏதும் இல்லை. அரசியல்வாதிகள் சிறப்பு அடைவர்.
மாணவர்கள்: வளர்ச்சி காணலாம். ஆசிரியர்கள் ஆலோசனை கிடைக்கும். 24-ந் தேதிக்கு பிறகு கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர். காலர்ஷிப் போன்றவை .கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி காண்பர்.
விவசாயம்: விளைச்சல் நன்றாக இருக்கும். நெல், பாசிபயறு, மஞ்சள்,சோளம், கரும்பு எள் போன்ற பயிர்களில் நல்ல மகசூலை காணலாம். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும்.
பெண்கள்: முன்னேறத்துடன் காணப்படுவீர்கள்.மாதத் தொடக்கத்தில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். 24-ந் தேதிக்கு பிறகு அக்கம் பக்கத்தினர் மிகவும் உதவிகரமாக இருப்பர். கணவனோடு விருந்து விழா என்று சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும்.1,27,28-ந் தேதிகளில் பெற்றோர் வீட்டில் இருந்து உதவிகள் வரப்பெறலாம். 9,10-ந் தேதிகளில் சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உடல்நலம்: சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். உஷ்ணம், பித்தம் தொடர்பான உபாதைகள் குணம் அடையும்.11,12-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டவும்13,14,15-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.5,6-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
அதிர்ஷ்டம்: 3,9 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை, கறுப்பு அதிர்ஷ்ட நிறங்கள் ஆகும். 1,7,8,9,10,16,17,18,19,22,23,24,27,28.ஆகிய தேதிகள் சிறப்பான நாட்கள்.
வழிபாடு: செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம். ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.நாக தேவதையை வணங்கி வாருங்கள். மாத முற்பகுதியில் சூரியன், புதனை வணங்கி பார்வையற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம்.

               மீனம்

மீனம் ராசி அன்பர்களே! இந்த மாதம் குரு 15-ந் தேதிக்கு பிறகும், சுக்கிரன் 17-ந் தேதிக்கு பிறகும், புதன் 3-ந் தேதியில் இருந்து 24-ந் தேதி வரையும் நற்பலனை கொடுப்பார்கள்.மேலும் ராகு மாதம் முழுவதும் நன்மை தருவார். அவரால் பொருளாதார வளம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை தந்து கொண்டு இருக்கிறார்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தனுசு ராசியில்இருந்து பல்வேறு பிரச்சினைகளை தந்துகொண்டிருந்தார் அவர் பொருள் இழப்பையும், வறுமையயும் தந்திருப்பார். சிலர் பதவி இழக்கும் நிலைக்கு ஆளாகி இருப்பர். இந்த நிலையில் 15-ந் தேதி குரு 11-ம் இடமான மகர ராசிக்கு வந்து உள்ளார். இது மிகவும் சிறப்பான இடம் ஆகும். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச்செய்வார்.மேலும் அவரின்7 மற்றும் 9-ம் இடத்து பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலமும் பல்வேறு நன்மைகள் பெறலாம். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.
குடும்பம்: வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். 3-ந் தேதிக்கு பிறகு உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். சுக்கிரனால் 17-ந் தேதிக்கு பிறகு வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குறிப்பாக 25,26-ந் தேதிகளில் அவர்களால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். 5,6ஆகிய தேதிகளில் உறவினர்கள் வகையில் வீண் விரோதம் வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.அதே நேரம் 20,21-ந் தேதிகளில் உறவினர்களின் வருகையும் அவர்களால் நன்மை கிடைக்கும். 2,3,4,29,30-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். 24-ந் தேதிக்கு பிறகுசிற்சில விஷயங்களில் பொறுமையாகவும், விட்டுகொடுத்து போகவும்.
உத்தியோகம்: வேலையில் திருப்தி காண்பீர்கள்.உங்கள் செல்வாக்கு அதிகரிக்- கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் வந்து சேரும். புதனின் அருளால் 3-ந் தேதிக்கு பிறகு சிலர் புதியபதவி கிடைக்க பெறுவர்.17-ந் தேதி வரை அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையேதும் இல்லை.சக பெண்ஊழியர்கள்மிகவும் ஆதரவுடன் இருப்பர் 18,19-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். 24-ந் தேதிக்கு பிறகு சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையும், விட்டுக்கொடுத்து போகவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
வணிகம்: நஷ்டம் தவிர்க்கப்படும். .அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு 15-ந் தேதிக்கு பிறகு மறையும். அதுவரை வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.22,23,24,27,28-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். அதே நேரம் 9,10-ந் தேதி சந்திரன் எதிர்பாராத பணவரவை தருவார். 24-ந் தேதிக்கு பிறகு தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும்.
பொதுநலம்: கலைஞர்ககளுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் 17-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர் அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் சுமாரான பலனை காண்பர். சற்று சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும்
விவசாயம்:காய்கறிகள், கீரை, பழ வகைகள், பயறு வகைகள் மூலம் நல்ல வருமானம் காணலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
மாணவர்கள்: பொதுவாக அதிகமாக சிரத்தை எடுக்க வேண்டியது இருந்தாலும், இந்த மாதத்தை பொறுத்தவரை குரு,புதனால் நல்ல வளர்ச் சியை காணலாம். ஆசிரியரிடம் நன்மதிப்பு கூடும். நற்பெயரை எடுப்பர்.
பெண்கள்: கணவரின் அன்பு கிடைக்கும். குடும்பத்தில் அனைவராலும் போற்றபடுவீர். பிள்ளைகள் வகையில் இருந்து வந்த பிரச்சினை மறையும்.தோழிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.3-ந் தேதிக்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்களுக்குபுதன் உயர்வை தருவார். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 17-ந் தேதிக்கு பிறகு உங்கள் கை ஓங்கி இருக்கும்.அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.11,12-ந் தேதிகளில் பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். உல்லாச பயணம் மேற்கொள்ளலாம். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும்.
உடல்நலம்: செவ்வாயால் சிறு சிறு உபாதைகள் வரலாம்.பயணத்தின் போது சற்று கவனம் தேவை. 16,17-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.13,14,15-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் நேரத்தை செலவிடவும்.
அதிர்ஷ்டம்: 1,7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். நீலம், பச்சை நலம் தரும் நிறம்.2,3,4,9,10,11,12,18,19,20,21,25,26,29,30. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: வியாழக்கிழமை தட்சணாமூர்த்தியையும் .சனிக்கிழமை பெருமாளையும் வழிபடுங்கள். தினமும் சூரியதரிசனம் செய்து ஞாயிற்று கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு துவரை தானம் செய்யுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.