ஒரே நாளில் பாலியல் குற்றவாளிகள் 23 பேருக்கு ஆயுள் தண்டனை
1 min read23 sex offenders sentenced to life in one day
22/10/2020
உத்தரபிரதேசத்தில் முதல்-மந்ரியி யோகி ஆதித்யநாத் நடவடிக்கையால் “மிஷன் சக்தி” திட்டத்தின் கீழ் பாலியல் குற்றங்களுக்காக ஒரே நாளில் 23 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
“மிஷன் சக்தி” திட்டம்
உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் என்ற இடத்தில் கடந்த மாதம் 14-ந் தேதி 19 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். அதன்பின் சிகிச்சையில் அந்தப் பெண் இறந்தாள்.
தலித் பெண்ணுக்கு நடந்த இந்தக் கொடுமை நாடுமுழுவதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்-மந்திரிய யோகி ஆதித்யநாத் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ‘மிஷன் சக்தி’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாலியல் புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.
ஒரேநாளில்…
இந்த திட்டத்தின்படி அந்த மாநிலத்தில் 70 மாவட்டங்களிலும் காவல்துறையினர் துரித நடவடிக்கைகளில் இறங்கினர். விசாரணையும் முடுக்கிவிடப்பட்டது.
இதன் பலனாக, கடந்த 19 மற்றும் 20-ந் தேதிகளுக்கு இடையிலான 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்ட நீதிமன்றங் களில் ஒத்திவைக்கப்பட்டிருந்த வழக்குகளின் தீர்ப்பில் 23 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
49 வழக்குகளில் சிக்கி ஜாமீன் பெற்றிருந்தவர்களுக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதவிர பாலியல் வழக்குகளில் சிக்கிய 29 குற்றவாளிகளுக்கு அவர்களது சொந்த மாவட்டங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே வழக்குகளில் 31 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் மிஷன் சக்திக்காக ஒரு இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் பாலியல் புகார்களைபதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகை வழக்குகளின் நிலையும் விவரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் பாலியல் வழக்குகள் தொடர்புடைய வீடியோ பதிவுகளும் யுடியூப் மூலம் பதிவேற்றம் செய் யப்பட்டுள்ளன. இதனால், மிஷன் சக்தி திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.