இந்தியாவில் ஒரே நாளில் 55,839 பேருக்கு கொரோனா
1 min readCorona for 55,839 people in onle day in India
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 55,839 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவலை இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றாலும் அதன் பரவல் சற்று குறைந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள கொரோனா நிலவரத்தை தினமும் காலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( வியாழக்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ( புதன்கிழமை) ஒரே நாளில் 55,839 பேர் கொரோனா தொற்று கண்டறிப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை 77 லட்சத்து 6ஆயிரத்து 947 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 68 லட்சத்து ஆயிரத்து 74 ஆயிரத்து 518 ஆக உயர்ந்துள்ளது. அதாவது குணமடைந்தோர் சதவீதம் 89.20 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கொரோனாவுக்கு 7 லட்சத்து 15 ஆயிரத்து 812 பேர்தான் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது ஒட்டுமொத்த பாதிப்பில் 9.29 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 6 நாட்களாகவே கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் கீழ் உள்ளது ஆறுதலான விசயம்.
702 பேர் சாவு
இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 702 பேர் இறந்துள்ளனர். இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 616 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். கொரோனாவில் உயிரிழப்பு சதவீதம் 1.51 ஆகும்.
நேற்று மட்டும் மராட்டிய மாநிலத்தில் 180 பேரும், கர்நாடகாவில் 88 பேரும், மேற்கு வங்கத்தில் 64 பேரும், தமிழகத்தில் 39 பேரும், சத்தீஸ்கரில் 44 பேரும், டெல்லியில் 47 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 41 பேரும் கொரேனாாவுக்கு இறந்துள்ளனர்.
பரிசோதனை
இந்தியாவில், இதுவரை நாட்டில் 9 கோடியே 86 லட்சத்து 70 ஆயிரத்து 363 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 14லட்சத்து 69 ஆயிரத்து 984 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.