May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 3,086 people in Tamil Nadu today

21/10/2020

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இன்று 3,086 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா

தமிழக்தில் கொரோனா இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும் தற்போது நாளுக்குநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினமும் 6 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது அது 3 ஆயிரமாக குறைந்துவிட்டது.
தமிழக்ததில் கொரோனா பாதிப்பு பற்றி தினமும் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று(புதன் கிழமை) 3, 086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்து 116 ஆக உள்ளது.

டிஸ்சார்ஜ்

கொரோா பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 4 ,301 பேர் குணமாகி சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 50 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 39 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை 10,780 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

மராட்டியம்

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில்தனர் கொரோனாவுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) மட்டும் 8,142 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் இன்று 5,872 பேருக்கும், மேற்கு வங்காளத்தல் 4,019 பேருக்கும் இன்று கொரேனா கண்டறியப்பட்டு உள்ளது-

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.