தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா
1 min readCorona for 2,652 people in Tamil Nadu today
29/10/2020
தமிழகத்தில் இன்று மட்டும் 2,652 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளன.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 19 ஆயிரத்து 403 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா கண்டறியப்பட்டவர்களில் இன்று மட்டும் 4,087 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதனால் தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 83 ஆயிரத்து 464 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 35 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 11,053 ஆக அதிகரித்துள்ளது.