May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 2,652 people in Tamil Nadu today

29/10/2020

தமிழகத்தில் இன்று மட்டும் 2,652 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளன.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 19 ஆயிரத்து 403 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா கண்டறியப்பட்டவர்களில் இன்று மட்டும் 4,087 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதனால் தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 83 ஆயிரத்து 464 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 35 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 11,053 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.