April 20, 2024

Seithi Saral

Tamil News Channel

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு- அரசாணை வெளியீடு

1 min read

7.5 per cent quota for government school students – Government publication

29/10/2020
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர 7.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இடஒதுக்கீடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். அதுபற்றி ஆலோசனை நடத்த 3, 4 வாரங்கள் ஆகும் என்று கவர்னர் அறிவித்துள்ளார்.
இதனால், மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

மசோதாவுக்கு கவர்னர் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் அவரை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அரசாணை

இந்த நிலையில், மருத்துவபடிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில் இந்த அரசாணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மசோதா மீது முடிவெடுக்க 4 வார காலம் அவசாகம் வேண்டும் என கவர்னர் அறிவித்துள்ள நிலையில் மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால், தமிழக அரசு, நீதித்துறை, கவர்னர் ஆகிய மூன்றுக்கும் இடையே அரசியலமைப்பு ரீதியிலான குழப்பங்கள் வரலாம் என்று கூறப்படுகிறது.

இடஒதுக்கீடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். அதுபற்றி ஆலோசனை நடத்த 3, 4 வாரங்கள் ஆகும் என்று கவர்னர் அறிவித்துள்ளார்.
இதனால், மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

மசோதாவுக்கு கவர்னர் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் அவரை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அரசாணை

இந்த நிலையில், மருத்துவபடிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில் இந்த அரசாணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மசோதா மீது முடிவெடுக்க 4 வார காலம் அவசாகம் வேண்டும் என கவர்னர் அறிவித்துள்ள நிலையில் மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால், தமிழக அரசு, நீதித்துறை, கவர்னர் ஆகிய மூன்றுக்கும் இடையே அரசியலமைப்பு ரீதியிலான குழப்பங்கள் வரலாம் என்று கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.